ETV Bharat / state

பொள்ளாச்சிக்கு கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

author img

By

Published : Jun 17, 2021, 8:12 PM IST

பொள்ளாச்சி அருகே உள்ள ரெட்டியார் மடம் காவல்துறை சோதனைச் சாவடியில் கடத்திவரப்பட்ட 63 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொள்ளாச்சிக்கு கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
பொள்ளாச்சிக்கு கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

கோவை: கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது தமிழ்நாடு முழுவதும் அமலில் இருந்து வருகிறது.

இதன்படி, பொள்ளாச்சியை அடுத்துள்ள ரெட்டியார் மடம், காவல்துறை சோதனைச் சாவடியில் காவலர்கள் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வேன் ஓட்டுநர் பேசியுள்ளார். இதனையடுத்து, அந்த வேனை சோதனையிட்டதில், மதுபாட்டில்கள் வேனில் மறைத்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர் அங்கலக்குறிச்சியை சேர்ந்த வசந்த் என்பதும், 63 மதுபாட்டில்கள் அந்த ஆம்னி வேனில் கடத்திவரப்பட்டதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ஆழியார் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான காவலர்கள் மதுபாட்டில்களையும், ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.

கரோனாவுக்கு மத்தியில், கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் உள்ளிட்டவற்றை குடித்து பலரும் உயிரிழந்து வந்த நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கடந்த திங்கள் கிழமை (ஜூன்.14) முதல் மதுக்கடைகள் தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. எனினும், அதிக விலையில் விற்பனை செய்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து இந்த மதுபாட்டில்கள் கடத்தி கொண்டுவரப்பட்டதாக கடத்தலில் ஈடுபட்ட நபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆழியார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது தமிழ்நாடு முழுவதும் அமலில் இருந்து வருகிறது.

இதன்படி, பொள்ளாச்சியை அடுத்துள்ள ரெட்டியார் மடம், காவல்துறை சோதனைச் சாவடியில் காவலர்கள் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டபோது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வேன் ஓட்டுநர் பேசியுள்ளார். இதனையடுத்து, அந்த வேனை சோதனையிட்டதில், மதுபாட்டில்கள் வேனில் மறைத்து கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர் அங்கலக்குறிச்சியை சேர்ந்த வசந்த் என்பதும், 63 மதுபாட்டில்கள் அந்த ஆம்னி வேனில் கடத்திவரப்பட்டதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து ஆழியார் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான காவலர்கள் மதுபாட்டில்களையும், ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர்.

கரோனாவுக்கு மத்தியில், கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் உள்ளிட்டவற்றை குடித்து பலரும் உயிரிழந்து வந்த நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கடந்த திங்கள் கிழமை (ஜூன்.14) முதல் மதுக்கடைகள் தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. எனினும், அதிக விலையில் விற்பனை செய்வதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து இந்த மதுபாட்டில்கள் கடத்தி கொண்டுவரப்பட்டதாக கடத்தலில் ஈடுபட்ட நபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆழியார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.