ETV Bharat / state

வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் கஞ்சா விற்பனை - பாக்கெட் மணிக்காக வலையில் சிக்கும் இளைஞர்கள்!

கோவை: கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வரும் நிலையில், வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக மாணவர்களே அதனை ஒரு தொழிலாகவே செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

author img

By

Published : Aug 22, 2019, 5:35 AM IST

Updated : Aug 22, 2019, 8:02 AM IST

Coimbatore

கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும், வெளி மாநில மாணவர்களும் கல்லூரி விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து சமீப காலமாக கஞ்சா விற்பனை நடைபெறுவது அதிகரித்துள்ளது. கடந்த இருபது நாட்களில் மட்டும் பல்வேறு இடங்களில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18ஆம் தேதி வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக கஞ்சா விற்பனை செய்த மலைச்சாமி என்பவரை பந்தயசாலை காவல் துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தும்மக்குண்டு கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி, கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 19ஆம் தேதி சுங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த புலியகுளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை ராமநாதபுரம் காவல் துறையினர் கைது செய்தனர். கஞ்சா வியாபாரிகள் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வது ஒருபுறமிருக்க, மாணவர்களே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி கல்லூரியில் படித்துக்கொண்டே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கேரள மாணவர்களை சரவணம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கட பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஜான், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த பாரீஸ் ஆகிய இருவரும் சரவணம்பட்டி பகுதியில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விநியோகித்து வருவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கண்காணித்த போது அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர். இவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் அளவிலான கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை

இது தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கல்லூரியில் படிக்கும் பிற மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மாணவர்கள் அதிகமாகப் படிக்கும் இடமான கோவை நகரில் தனியார் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும், மாணவர்களிடம் அதிகரித்து வரும் கஞ்சா பழக்கம் பல குற்றச்செயல்களுக்கு காரணமாக உள்ளது எனவும் மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்கள் மூலமாகவே கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், சில மாணவர்கள் பகுதிநேர வருமானத்திற்காக இதனை தொழிலாகவே செய்து வருவதாகவும் கூறிய அவர்கள், அதற்காக வாட்ஸ்அப் குழுக்கள் இயங்கி வருவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

இதில் உள்ள ஆபத்தை மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் கோவையில் கல்லூரிகளில் காவல்துறை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காணிப்பு குழுக்களை அமைத்து கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும், வெளி மாநில மாணவர்களும் கல்லூரி விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து சமீப காலமாக கஞ்சா விற்பனை நடைபெறுவது அதிகரித்துள்ளது. கடந்த இருபது நாட்களில் மட்டும் பல்வேறு இடங்களில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18ஆம் தேதி வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக கஞ்சா விற்பனை செய்த மலைச்சாமி என்பவரை பந்தயசாலை காவல் துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தும்மக்குண்டு கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி, கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 19ஆம் தேதி சுங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த புலியகுளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை ராமநாதபுரம் காவல் துறையினர் கைது செய்தனர். கஞ்சா வியாபாரிகள் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வது ஒருபுறமிருக்க, மாணவர்களே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி கல்லூரியில் படித்துக்கொண்டே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கேரள மாணவர்களை சரவணம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கட பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஜான், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த பாரீஸ் ஆகிய இருவரும் சரவணம்பட்டி பகுதியில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விநியோகித்து வருவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கண்காணித்த போது அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர். இவர்களிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் அளவிலான கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை

இது தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கல்லூரியில் படிக்கும் பிற மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மாணவர்கள் அதிகமாகப் படிக்கும் இடமான கோவை நகரில் தனியார் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும், மாணவர்களிடம் அதிகரித்து வரும் கஞ்சா பழக்கம் பல குற்றச்செயல்களுக்கு காரணமாக உள்ளது எனவும் மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்கள் மூலமாகவே கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், சில மாணவர்கள் பகுதிநேர வருமானத்திற்காக இதனை தொழிலாகவே செய்து வருவதாகவும் கூறிய அவர்கள், அதற்காக வாட்ஸ்அப் குழுக்கள் இயங்கி வருவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

இதில் உள்ள ஆபத்தை மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் கோவையில் கல்லூரிகளில் காவல்துறை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காணிப்பு குழுக்களை அமைத்து கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Intro:கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வரும் நிலையில், வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாக மாணவர்களே அதனை ஒரு தொழிலாக செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கஞ்சா விற்பனையை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதுBody:
கோவை மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் கலை கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும், வெளி மாநில மாணவர்களும் கல்லூரி விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரமான கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவது அதிகரித்துள்ளது. கடந்த இருபது நாட்களில் மட்டும் பல்வேறு இடங்களில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 18 ம் தேதி வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாக கஞ்சா விற்பனை செய்த மலைச்சாமி என்பவரை பந்தயசாலை காவல் துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தும்மக்குண்டு கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி, கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். குறிப்பாக கோவை அரசு கல்லூரி மற்றும் மாநகரில் உள்ள தனியார் கல்லூரிகளை குறிவைத்து விற்பனை செய்து வந்துள்ளார். மேலும் இவரிடம் கஞ்சா தேவைப்படுபவர்கள் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்து வாங்கி வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பந்தயசாலை காவல் துறையினர் கோவையில் இருந்து தேனிக்கு திரும்பும் போது கையும் களவுமாக பிடித்தனர். இதை தொடர்ந்து அவரிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் 2000 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த 19 ம் தேதி சுங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த புலியகுளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை ராமநாதபுரம் காவல் துறையினர் கைது செய்தனர்.
கஞ்சா வியாபாரிகள் மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்வது ஒருபுறமிருக்க, மாணவர்களே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒன்றாம் தேதி கல்லூரியில் படித்துக்கொண்டே  மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கேரள மாணவர்களை சரவணம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கட பகுதியை சேர்ந்த ஜோசப் ஜான், மற்றும் மலப்புரம் பகுதியை சேர்ந்த பாரீஸ் ஆகிய இருவரும் சரவணம்பட்டி பகுதியில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் சப்ளை செய்து வருவதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கண்காணித்த போது அவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் கஞ்சா விற்றுக்கொண்டிருந்தபோது போலீசாரால் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1300 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 2 ம் தேதி மாணவ மாணவிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த புரோட்டோ கடைக்காரரை மதுக்கரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிபிரசாந்த். இவர் மதுக்கரை அரிசிபாளையம் அருகே புரோட்டா கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இருந்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலிசாருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது, இதையடுத்து மதுக்கரை போலிசார் புரோட்டா கடையில் ஆய்வு மேற்கொண்டனர், அப்போது ரவிபிரசாந்த் கடையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 1.5 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்தனர், மேலும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர், பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கு சொந்தமானது என்பதும், ரவி பிரசாந்த் மற்றும் பழனியம்மாள் இருவரும் இணைந்து பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே பழனியம்மாள் கைது செய்யப்பட்ட நிலையில், ரவி பிரசாத்தும் கைது செய்யப்பட்டார்.
மாணவர்கள் அதிகமாக படிக்கும் இடமான கோவை நகரில் தனியார் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும், மாணவர்களிடம் அதிகரித்து வரும் கஞ்சா பழக்கம் பல குற்றச்செயல்களுக்கு காரணமாக உள்ளது எனவும் மாணவர் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். கல்லூரிகள் மற்றும் விடுதிகளில் மாணவர்கள் மூலமாகவே கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், சில மாணவர்கள் வருமானத்திற்காக இதனை தொழிலாகவே செய்து வருவதாகவும் கூறிய அவர்கள், அதற்காக வாட்ஸ் ஆப் குழுக்கள் இயங்கி வருவதாக தெரிவித்தனர்.Conclusion:
Last Updated : Aug 22, 2019, 8:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.