ETV Bharat / state

மழையால் வீடுகளுக்குள் நீர்புகும் அபாயம்! - வீடுகளுக்குள் நீர்புகும் அபாயம்

கோவை: பொள்ளாச்சி பல்லடம் சாலையில் மாலை நேரம் பெய்த கனமழையால் அருகில் உள்ள வீடுகளில் மழைநீர் புகும் அபாயம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை
author img

By

Published : Oct 9, 2019, 11:44 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை இடியுடன் கூடிய கனமழை அரை மணி நேரம் பெய்தது. பிரதான சாலையான பொள்ளாச்சி பல்லடம் சாலை அருகில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

மழையால் வீடுகளுக்குள் நீர்புகும் அபாயம்

இன்று பெய்த கனமழையினால் சாலையில் அதிக அளவிலான நீர் தேங்கி வீடுகளுக்குள் வரும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் பேசுகையில், மழைநீர் வடிகால் இல்லாததால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும். எனவே நகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் நலன் கருதி மழை காலம் தொடங்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிக்கலாமே: கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுக்கும் வீடுகளை இழந்த மக்கள்; நடவடிக்கை எடுக்குமா அரசு?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை இடியுடன் கூடிய கனமழை அரை மணி நேரம் பெய்தது. பிரதான சாலையான பொள்ளாச்சி பல்லடம் சாலை அருகில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

மழையால் வீடுகளுக்குள் நீர்புகும் அபாயம்

இன்று பெய்த கனமழையினால் சாலையில் அதிக அளவிலான நீர் தேங்கி வீடுகளுக்குள் வரும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் பேசுகையில், மழைநீர் வடிகால் இல்லாததால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும். எனவே நகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் நலன் கருதி மழை காலம் தொடங்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிக்கலாமே: கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுக்கும் வீடுகளை இழந்த மக்கள்; நடவடிக்கை எடுக்குமா அரசு?

Intro:rainwaterBody:rainwaterConclusion:பொள்ளாச்சி பல்லடம் சாலையில் மாலை பெய்த மழையால் அருகில் உள்ள வீடுகளில் வெள்ளம்பூகும் அபாயம் . பொள்ளாச்சி-9 பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில்மாலை இடியுடன் கூடிய கனமழை அரை மணி பெய்தது. இதில் பொள்ளாச்சி பல்லடம் சாலை போக்குவரத்துக்கு பிரதான சாலையாகும், சாலையின் அருகில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இன்று பெய்தா மழையினால் சாலையில் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டு வீடுகளில்பூகும் அபாயம் ஏற்ப்பட்டது, பொதுமக்கள் கூறுகையில் மழை பெய்ததால் மழை நீர்வடிகால் இல்லததால் மழை நீர் சாலையில் பெருக்கு எடுத்து ஓடுகிறது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளகின்றனர், நகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதிமழை காலம் தொடங்கும் முன் முன் எச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.