ETV Bharat / state

கோவையில் மீண்டும் வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து நோட்டமிடும் சைக்கோ திருடன் - Coimbatore district news

கோயம்புத்தூர்: இடையர்பாளையம் பகுதியில் மீண்டும் வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து நோட்டமிடும் சைக்கோ திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சைக்கோ திருடன்
சைக்கோ திருடன்
author img

By

Published : Oct 6, 2020, 7:36 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் இடையர்பாளையம் மருதநகர் பகுதியில் சென்ற சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரங்களில் வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து நோட்டமிடும் சைக்கோ திருடனின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக துடியலூர் காவல் துறையினர் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியை அதிகரித்ததால் சைக்கோ திருடன் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் மீண்டும் இடையர்பாளையம் பகுதியில் உள்ள பூம்புகார் நகர், மருத நகர், ஸ்ரீனிவாச நகர் ஆகிய பகுதிகளில் அதே சைக்கோ திருடன் நடமாட்டம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று (அக். 05) இரவு 10.15 மணியளவில் மருதநகர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் சைக்கோ திருடன் அங்குள்ள ஒரு வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்துள்ளான்.

சைக்கோ திருடன்
உடனே பக்கவீட்டார் சத்தம் போட்டு அவனை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் உசாரான சைக்கோ திருடன் அவனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.
இந்தக் காட்சிகள் அப்பகுயில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் இடையர்பாளையம் மருதநகர் பகுதியில் சென்ற சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரங்களில் வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து நோட்டமிடும் சைக்கோ திருடனின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக துடியலூர் காவல் துறையினர் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியை அதிகரித்ததால் சைக்கோ திருடன் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் மீண்டும் இடையர்பாளையம் பகுதியில் உள்ள பூம்புகார் நகர், மருத நகர், ஸ்ரீனிவாச நகர் ஆகிய பகுதிகளில் அதே சைக்கோ திருடன் நடமாட்டம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று (அக். 05) இரவு 10.15 மணியளவில் மருதநகர் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வரும் சைக்கோ திருடன் அங்குள்ள ஒரு வீட்டின் ஜன்னல் கதவை திறந்து பார்த்துள்ளான்.

சைக்கோ திருடன்
உடனே பக்கவீட்டார் சத்தம் போட்டு அவனை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் உசாரான சைக்கோ திருடன் அவனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.
இந்தக் காட்சிகள் அப்பகுயில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து துடியலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.