கோவை மாவட்டம் பீளமேடு சாலையிலுள்ள தனியார் மேலாண்மை கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் விக் செய்துகொள்வதற்காக, 10 அங்குல முடியை தானமாக அளித்தனர்.
புற்றுநோய் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இந்த முடிதான செயலை, அனைவரும் பாராட்டிவருகின்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தலைமுடி உதிர்வது இயல்பு என்பதால் அவர்களில் பெரும்பாலானோர் செயற்கை தலைமுடி(விக்) வாங்கி பயன்படுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ரத்த தானம் செய்பவர்களுக்கு 'இலவச பிரியாணி'!