ETV Bharat / state

பொள்ளாச்சியில் நகைக்கடை, தொழிலதிபர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

author img

By

Published : Jul 31, 2019, 12:36 AM IST

கோவை: வரி ஏய்ப்பு தொடர்பாக பொள்ளாச்சியில் உள்ள பிரபல நகைக்கடைகள், ரியல் எஸ்டேட் அதிபர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

cbe


கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடைவீதியில் செயல்பட்டு வரும் சின்ன அண்ணன் ஜுவல்லரி மற்றும் கணபதி ஜூவல் சிட்டி நகைக் கடைகள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் இந்த கடைகளில் செவ்வாய்க்கிழமையன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கடை ஊழியர்களை வெளியே விடாமலும், வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்காமலும் வருமான வரித்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

வருமான வரி சோதனை நடத்தப்பட்ட நகை கடைகள்

இதனிடையே, பொள்ளாச்சி கோட்டாம்பட்டி சுப்பையன் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஈஸ்வரமூர்த்தி என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அதேபோன்று, பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் பகுதியில் ஆயில் மில் நடத்தி வரும் சசிகுமார் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

ஒரே நாளில் பொள்ளாச்சியில் அடுத்தடுத்து எட்டு இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடைவீதியில் செயல்பட்டு வரும் சின்ன அண்ணன் ஜுவல்லரி மற்றும் கணபதி ஜூவல் சிட்டி நகைக் கடைகள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அலுவலர்கள் இந்த கடைகளில் செவ்வாய்க்கிழமையன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கடை ஊழியர்களை வெளியே விடாமலும், வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்காமலும் வருமான வரித்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றியதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

வருமான வரி சோதனை நடத்தப்பட்ட நகை கடைகள்

இதனிடையே, பொள்ளாச்சி கோட்டாம்பட்டி சுப்பையன் நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஈஸ்வரமூர்த்தி என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அதேபோன்று, பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் பகுதியில் ஆயில் மில் நடத்தி வரும் சசிகுமார் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

ஒரே நாளில் பொள்ளாச்சியில் அடுத்தடுத்து எட்டு இடங்களில் வருமான வரி சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Jewellery rideBody:Jewellery rideConclusion:வரி ஏய்பு செய்ததாக பொள்ளாச்சியில் பிரபல நகைக்கடைகள் ரியல் எஸ்டேட் அதிபர் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 மணி நேரம் அதிரடி சோதனை
பொள்ளாச்சி ஜூலை 30

பொள்ளாச்சி கடைவீதியில் செயல்படும் சின்ன அண்ணன் ஜுவல்லரி மற்றும் கணபதி ஜூவல் சிட்டி உள்ளிட்ட நகை கடைகளில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரிதுறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது கடை ஊழியர்களை வெளியே விடாமலும். வாடியாளர்களை உள்ளே அனுமதிக்காமல் அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டனர். காலை தொடங்கி மாலைவரை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் பல ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல் பொள்ளாச்சி கோட்டாம்பட்டி சுப்பையன் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஈஸ்வரமூர்த்தி என்பவரது வீட்டிலும் வருமான வரி துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை மேற்கொண்டனர் கல்குவாரி, பல்வேறு வணிக நிறுவனங்கள் வைத்தி௹க்கும் ஈஸ்வரமூர்த்தியும் , பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் பகுதியில் ஆயில் மில் நடத்தி வரும் சசிகுமார் என்பவரது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பொள்ளாச்சி பகுதியில் இதே போல பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாகவும் சோதனையின் முடிவில் இது குறித்து முழுமையான எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்பது கணக்கில் வராத பொருட்கள் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா? என்ற தகவல் கூற முடியும் என்று சோதனையிட வந்த அதிகாரிகள் தெரிவித்தனர்
பொள்ளாச்சியில் ஒரே நாளில் பல இடங்களில் 8 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்று வரும் வருமானவரித்துறையினர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.