ETV Bharat / state

அரசு கலைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம் - Government Arts College Pongal Celebration

கோவை: பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரி பொங்கல் கொண்டாட்டம் Pollachi Government Arts College Pongal Celebration Government Arts College Pongal Celebration அரசு கலைக் கல்லூரி பொங்கல் கொண்டாட்டம்
Government Arts College Pongal Celebration
author img

By

Published : Jan 14, 2020, 2:50 PM IST

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடிவருகின்றனர். அந்த வகையில், நேற்று பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

அதில், கல்லூரி மாணவ, மாணவிகள் பாரம்பரியமான வேட்டி, சேலை அணிந்து வந்து புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என சொல்லி மகிழ்ந்தனர். இதையடுத்து, மாடுகளுக்கு சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு, பொங்கல் வழங்கப்பட்டது, இதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் கிராமியப் பாடலுக்கு நடனம் ஆடியும் கிராமிய மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர்.

பொங்கல் கொண்டாட்டம்

மேலும் கல்லூரியில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஆடிப்பாடி சமத்துவப் பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். இதேபோல், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொங்கல் விழா மிகவும் சீரும் சிறப்பாக பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது. விழாவில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

பொங்கல் திருவிழா - தலை தூக்கும் வழிப்பறி கும்பல்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடிவருகின்றனர். அந்த வகையில், நேற்று பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

அதில், கல்லூரி மாணவ, மாணவிகள் பாரம்பரியமான வேட்டி, சேலை அணிந்து வந்து புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என சொல்லி மகிழ்ந்தனர். இதையடுத்து, மாடுகளுக்கு சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு, பொங்கல் வழங்கப்பட்டது, இதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் கிராமியப் பாடலுக்கு நடனம் ஆடியும் கிராமிய மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடியும் மகிழ்ந்தனர்.

பொங்கல் கொண்டாட்டம்

மேலும் கல்லூரியில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஆடிப்பாடி சமத்துவப் பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். இதேபோல், பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பொங்கல் விழா மிகவும் சீரும் சிறப்பாக பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது. விழாவில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

பொங்கல் திருவிழா - தலை தூக்கும் வழிப்பறி கும்பல்!

Intro:festivalBody:festivalConclusion:பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா- புதுப்பானையில் பொங்கலிட்டு ஆடிப்பாடி மாணவ-மாணவிகள் கொண்டாட்டம்

பொள்ளாச்சி, ஜன- 13

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது, பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக கல்லூரிகளில் மாணவ மாணவிகள் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகின்றனர், இன்று பொள்ளாச்சியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது, கல்லூரி மாணவ-மாணவிகள் பாரம்பரியமான சேலை ,வேட்டி சட்டை அணிந்து வந்து புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என சொல்லி மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து மாடுகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பொங்கல் வழங்கப்பட்டது, இதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகள் கிராமியப் பாடலுக்கு நடனம் ஆடியும், கிராமிய மேளதாளங்கள் முழங்க அதற்கேற்ப மாணவ மாணவிகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர் மேலும் கும்மியடித்தும் மகிழ்ந்தனர், கல்லூரியில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஆடிப்பாடி சமத்துவ பொங்கல் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.