ETV Bharat / state

பல முறை மயக்கமடைந்த 'அரிசி ராஜா' காட்டுயானை !

author img

By

Published : Nov 14, 2019, 11:38 PM IST

கோவை: அர்த்தநாரி பாளையத்தில் சுற்றித்திரிந்த  'அரிசி ராஜா'வைப் பிடித்த வனத்துறையினர்,  அதிக டோஸ் மயக்க மருந்து செலுத்தியதால் பல முறை மயக்கமடைந்தது.

pollachi elephant

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அர்த்தநாரி பாளையத்தில் சுற்றித்திரிந்த ஆட்கொல்லி காட்டுயானை 'அரிசிராஜா' இதுவரை எட்டு பேரைக் கொன்றுள்ளது. இந்த யானையால் மேலும் ஏழு பேர் படுகாயமும் அடைந்துள்ளனர். யானையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், கடந்த சனிக்கிழமை காட்டு யானையைப் பிடிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை பருத்தியூர் தனியார் தோட்டத்தில் நின்றுகொண்டிருந்த காட்டு யானை 'அரிசி ராஜா'வை வனத்துறை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட 'அரிசி ராஜா' காட்டு யானை

அதன்பின், லாரியில் காட்டு யானை ஏற்றப்பட்டது. காட்டு யானைக்கு அதிக டோஸ் மயக்க ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. லாரியில் சென்று கொண்டிருக்கும் போது பல முறை 'அரிசி ராஜா' காட்டு யானை மயக்க மடைந்தது. பிடிக்கப்பட்ட இந்த காட்டுயானை டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு கரோலில் அடைக்கப்பட்டது.

இதுகுறித்து, அர்த்தநாரி பாளையம், சுற்றுப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'காட்டுயானையைப் பிடிக்கக்கூறித்தான் நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், அதைக் கொடுமை படுத்த வேண்டும் என்று கூறவில்லை’ என்றனர்.

அரிசி ராஜா குறித்து கூறும் அப்பகுதியை சேர்ந்தவர்

இதையும் படிங்க:

ஆட்கொல்லி 'அரிசி ராஜா'வை மயக்க ஊசி போட்டு பிடித்த வனத் துறை!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அர்த்தநாரி பாளையத்தில் சுற்றித்திரிந்த ஆட்கொல்லி காட்டுயானை 'அரிசிராஜா' இதுவரை எட்டு பேரைக் கொன்றுள்ளது. இந்த யானையால் மேலும் ஏழு பேர் படுகாயமும் அடைந்துள்ளனர். யானையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில், கடந்த சனிக்கிழமை காட்டு யானையைப் பிடிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை பருத்தியூர் தனியார் தோட்டத்தில் நின்றுகொண்டிருந்த காட்டு யானை 'அரிசி ராஜா'வை வனத்துறை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட 'அரிசி ராஜா' காட்டு யானை

அதன்பின், லாரியில் காட்டு யானை ஏற்றப்பட்டது. காட்டு யானைக்கு அதிக டோஸ் மயக்க ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. லாரியில் சென்று கொண்டிருக்கும் போது பல முறை 'அரிசி ராஜா' காட்டு யானை மயக்க மடைந்தது. பிடிக்கப்பட்ட இந்த காட்டுயானை டாப்சிலிப் பகுதியில் உள்ள வரகளியாறு கரோலில் அடைக்கப்பட்டது.

இதுகுறித்து, அர்த்தநாரி பாளையம், சுற்றுப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'காட்டுயானையைப் பிடிக்கக்கூறித்தான் நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், அதைக் கொடுமை படுத்த வேண்டும் என்று கூறவில்லை’ என்றனர்.

அரிசி ராஜா குறித்து கூறும் அப்பகுதியை சேர்ந்தவர்

இதையும் படிங்க:

ஆட்கொல்லி 'அரிசி ராஜா'வை மயக்க ஊசி போட்டு பிடித்த வனத் துறை!

Intro:vairalvideoBody:vairal videoConclusion:      

 கோவை, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய பகுதிகளில் ஒற்றை ஆண் காட்டு யானை டாப்சிலிப் போகும் வழியில் மயக்கம், அதிக மருத்துசெலுத்தியதால் விபரீதம். வாட்ஸ் அப் வைரல் வீடியோ.
பொள்ளாச்சி -14 பொள்ளாச்சி அருகே உள்ள அர்த்தநாரிபாளையத்தில் விவசாயியைராதாகிருஷ்ணன் என்பவரை தாக்கி கொன்றது, இதையடுத்து பொதுமக்கள் நா.மூ. சுங்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர் இந்நிலையில்
  யானையை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை முதல் யானை பிடிப்பதற்கான பணிகள் துவங்கின. வனக்கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர், யானை ஆராய்ச்சியாளர்கள், அவர்களுக்கு உதவியாக போலீஸார் என 100க்கும் மேற்பட்டோர் குழு காட்டு யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.  ஞாயிற்றுக்கிழமை இரவும், திங்கள்கிழமை இரவும் மழை பெய்ததால் யானை வனப்பகுதியை விட்டு வெளியில் வரவில்லை. டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் கலீம், பாரி ஆகியவை கொண்டுவரப்பட்டு அர்த்தநாரிபாளையம் பெருமாள் மலை அடிவாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், திங்கள்கிழமை இரவு கும்கி யானை பாரிக்கு மஸ்து ஏற்பட்டு மதம் பிடித்தது. பாரி யானை பாகனுக்கு அடிபணிய மறுக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், செவ்வாய்கிழமை காலை கும்கி யானை பாரி லாரியில் ஏற்றப்பட்டு டாப்சிலிப் கொண்டுசெல்லப்பட்டது. 

டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானை கபில்தேவ்  கொண்டுவரப்பட்டது இந்நிலையில், ஒற்றை காட்டு யானை அர்த்தநாரிபாளையம் பகுதிக்கு 4 நாட்களாக வராமல் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்தது. யானை  செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து மாலை வரை தேடும் பணி நடைபெற்றது. அர்த்தநாரிபாளையம் அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில் புதன்கிழமை மாலை கண்டறியப்பட்டது. இதையடுத்து, யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் ஆண்டியூர் பகுதியில் காட்டு யானை அரிசி ராஜா கண்டறியப்பட்டது. காட்டு யானை வனப்பகுதி அருகே விவசாய தோட்டத்திற்குள் வைத்து புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் அரிசி ராஜாவுக்கு மயக்க ஊசி செலுத்தினார். மயக்க ஊசி செலுத்தியவுடன் காட்டு யானை வேகமாக ஓடிச்சென்று வனப்பகுதியை ஒட்டிய அகழியில் இறங்கியது. 

இதையடுத்து கும்கி யானைகள் கலீம், கபில்தேவ் கொண்டு செல்லப்பட்டு காட்டு யானை அரிசி ராஜா இடம்பெயறாமல் பிடித்து நிறுத்தி வைக்கப்பட்டது. யானை மீது கயிறு போட்டு கட்டப்பட்டது. தொடர்ந்து காட்டு யானை லாரியில் ஏற்றும் பணிகள் நடைபெற்றது. காலை 7 மணிக்கு மேல் லாரியில் ஏற்ற கும்கி யானைகள் உதவியுடன் முயற்சி செய்யப்பட்டது. கோபமடைந்த காட்டு யானை கலீம் யானை ஓடிச்சென்று தாக்கியது. கலீம் கும்கி யானைவிடாமுயற்சியால் காட்டு யானையை லாரிக்கு தள்ளிச்சென்றது. காலை 9 மணிக்குள் லாரியில் காட்டு யானை ஏற்றப்பட்டது. காட்டு யானைக்கு அதிக டோஸ் மயக்க  ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. லாரியில் ஏற்றும் முன்பும், லாரியில் ஏற்றிய பிறகு பல முறையில் அரிசி ராஜா காட்டு யானை மயக்க மடைந்தது. 

 வனத்துறையினர் யானை மீது தண்ணீர் ஊற்றி மயக்க தெளிய செய்தனர். யானை பல முறை மயக்கமடைந்ததால் கோபமடைந்த பொள்ளாச்சி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து பத்திரிக்கையாளர்கள் யானை மயக்கமடைவதை படம் எடுக்கின்றனர், அவர்களுக்கு படம் பிடிக்க யார் அனுமதி கொடுத்தது என்று தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களை திட்ட துவங்கினார். மேலும் பத்திரிக்கையாளர்களிடம் நாங்கள் மயக்க மருந்து எவ்வளவு டோஸ் கொடுக்கிறோம் என்பதை எப்படி தொலைக்காட்சியில் நீங்கள் ஒளிபரப்பலாம், உங்களக்கு அது தேவையில்லாத வேலை என்று  கடிந்துகொண்டதுடன் பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசினார். 

 இதைதொடர்ந்து சேத்துமடைச்சோதனைச்சாவடியில் பத்திரிக்கையாளர்களை தடுத்துநிறுத்துமாறும் உத்தரவிட்டார். இதையடுத்து, பத்திரிக்கையாளர்கள் யாரும் டாப்சிலிப்பிற்கு அனுமதிக்கப்படவில்லை. டாப்சிலிப்பிற்கு சுற்றுலாப்பயணிகள் யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காமல் தடுத்துவிட்டார். 

 அர்த்தநாரிபாளையம் மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், காட்டுயானையை பிடிக்கக்கூறித்தான் நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், அதை கொடுமை படுத்த வேண்டும் என்று கூறவில்லை என்றனர்.
இதையடுத்து மாவட்ட வன உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது மாவட்ட வன அலுவலர் தான் பத்திரிக்கையாளர்கள் கூட்டமாக வருகிறார்கள் எனவும் இவர்களால் தனக்கு இடைஞ்சலாக உள்ளார்கள் என கூறியது தெரிய வந்தது. கடந்த ஐந்து நாட்களாக விவசாயிகள் பணத்தில் தான் எல்லா செலவு கணக்கும் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது, இனி வரும் காலங்களில் சின்னதம்பி யானை நிலை அறிய நிலையில் அரிசி ராஜா நிலை கேள்வி குறியாக உள்ளது தன்னார்வலர்கள் தெரிவித்தனர். (பொதுமக்கள் எடுத்த வாட்ஸ் அப் வைரல் வீடியோ)
 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.