ETV Bharat / state

கோவையில் தபால் வாக்குப்பதிவு; ஆர்வமுடன் வாக்களித்த போலீசார்!

author img

By

Published : Apr 10, 2019, 1:34 PM IST

கோவை: கோவையில் நடந்த தபால் வாக்குப்பதிவு மையத்தில், தேர்தல் பணியாற்ற உள்ள காவல்துறையினர் நீண்ட வரிசையில் நின்றபடி ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தபால் வாக்களித்த போலீசார்

கோவை மாவட்டத்தில் 15 ஆயிரம் அரசு ஊழியர்கள், மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த தொகுதிகளில் தபால் வாக்குப்பதிவு பயிற்சி முகாம் நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் செலுத்த அந்தந்த பகுதியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அவர்களும் வாக்களித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு கோவையில் நேற்று நடைபெற்றது. கோவை பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தபால் வாக்குப்பதிவு மையத்தில் ஏராளமான காவல்துறையினர் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தபால் வாக்குப்பதிவு

இந்த தபால் வாக்குப்பதிவு, தனி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வாக்குகள், தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு மே மாதம் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது எண்ணப்படும். வாக்குகள் அனைத்தும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் 15 ஆயிரம் அரசு ஊழியர்கள், மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த தொகுதிகளில் தபால் வாக்குப்பதிவு பயிற்சி முகாம் நடைபெற்றது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகள் செலுத்த அந்தந்த பகுதியில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அவர்களும் வாக்களித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு கோவையில் நேற்று நடைபெற்றது. கோவை பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தபால் வாக்குப்பதிவு மையத்தில் ஏராளமான காவல்துறையினர் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தபால் வாக்குப்பதிவு

இந்த தபால் வாக்குப்பதிவு, தனி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வாக்குகள், தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு மே மாதம் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது எண்ணப்படும். வாக்குகள் அனைத்தும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Intro:கோவையில் வரிசையில் நின்று ஆர்வமுடன் தபால் மூலம் வாக்களிக்கும் காவலர்கள்...


Body:நாடாளுமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 15 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர் இவர்களுக்கு அந்தந்த சட்டசபைத் தொகுதிகளில் பயிற்சி முகாம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான தபால் ஓட்டுகள் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான தபால் ஓட்டு பதிவு கோவையில் நடைபெற்று வருகிறது கோவை பள்ளிபாளையம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தபால் ஓட்டுப்பதிவு ஏராளமான காவலர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர் தபால் ஓட்டு கட்டி வைத்து தனி அதிகாரிகள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது அந்த தபால் ஓட்டு போட்டார்கள் அந்த தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு மே மாதம் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது இந்த ஓட்டுகள் எண்ணப்படும் இந்த தபால் ஓட்டுகள் அனைத்தும் strong ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.