ETV Bharat / state

உழவர் சந்தையில் லஞ்சம் கேட்ட அலுவலர்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

author img

By

Published : Feb 3, 2020, 10:14 PM IST

கோவை: ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் நீலகிரி உழவர்களை கடை நடத்தவிடாமல் தடுக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

pettition
pettition

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள் அரசு அலுவலர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த உழவர் சந்தையில் சுமார் 200 கடைகள் உள்ளன.


இதில் 60 விழுக்காடு கடைகள்தான் விவசாயிகளால் நடத்தப்படுகின்றன. மீதமுள்ள கடைகள் வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இங்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள உழவர்கள் அடையாள அட்டையுடன் காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். இவர்களிடம் அலுவர்கள் நாள்தோறும் பணம் வசூலிக்கின்றனர். இதில், பணம் கொடுக்க மறுக்கும் விவசாயிகளுக்கு கடை வழங்க மறுக்கின்றனர். இதனால் கடை நடத்தவிடாமல் தடுக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி சுமித்ரா, “கடந்த 15 ஆண்டுகளாக ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்துவருகிறோம். தற்போது வந்துள்ள உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் கண்ணன் என்பவர் தொடர்ந்து லஞசம் கேட்கிறார். ஆனால் நாங்கள் பணம் தர மறுத்ததால் எங்களை காய்கறி சந்தையில் விற்பனை செய்யவிடாமல் தடுத்துவருகிறார். ஊட்டி, நீலகிரி விவசாயிகளை வெளியேற்றும் நோக்கில் அவர் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ளன காய்கறிகளை சந்தையில் கொட்டிவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர் தீக்குளிக்க முயற்சி!

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள் அரசு அலுவலர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த உழவர் சந்தையில் சுமார் 200 கடைகள் உள்ளன.


இதில் 60 விழுக்காடு கடைகள்தான் விவசாயிகளால் நடத்தப்படுகின்றன. மீதமுள்ள கடைகள் வியாபாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இங்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள உழவர்கள் அடையாள அட்டையுடன் காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். இவர்களிடம் அலுவர்கள் நாள்தோறும் பணம் வசூலிக்கின்றனர். இதில், பணம் கொடுக்க மறுக்கும் விவசாயிகளுக்கு கடை வழங்க மறுக்கின்றனர். இதனால் கடை நடத்தவிடாமல் தடுக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் ஆட்சியரிடம் மனு

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி சுமித்ரா, “கடந்த 15 ஆண்டுகளாக ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்துவருகிறோம். தற்போது வந்துள்ள உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் கண்ணன் என்பவர் தொடர்ந்து லஞசம் கேட்கிறார். ஆனால் நாங்கள் பணம் தர மறுத்ததால் எங்களை காய்கறி சந்தையில் விற்பனை செய்யவிடாமல் தடுத்துவருகிறார். ஊட்டி, நீலகிரி விவசாயிகளை வெளியேற்றும் நோக்கில் அவர் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ளன காய்கறிகளை சந்தையில் கொட்டிவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தவர் தீக்குளிக்க முயற்சி!

Intro:ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் நீலகிரி மாவட்ட உழவர்களை காய்கறிகள் விற்க அனுமதிக்காததால் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனுBody:கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் நீலகிரி மாவட்ட மற்றும் கோத்தகிரி விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்காததால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

மனு அளிக்க வந்தவர்கள் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்வதற்கு அடையாள அட்டைகள் இருந்தும் அந்த சந்தையின் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்காததால் தங்களை காய்கறி விற்பனை செய்வதற்கு அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அந்த உழவர் சந்தையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி விற்பனை செய்து வருவதாகவும் ஆனால் தற்போது சந்தையில் அதிகாரி கண்ணன் வியாபாரிகளிடம் லஞ்சம் கேட்பதாகவும் தெரிவித்தனர். லஞ்சம் தராத விவசாயிகளை அங்கே காய்கறி விற்பனை செய்வதற்கு அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இதனால் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான காய்கறிகளை சந்தையில் கொட்டிவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயி சுமித்ரா கடந்த 15 ஆண்டுகளாக ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்து வருவதாகவும் இதுவரை ஒரு பிரச்சையும் இல்லை என்றும் ஆனால் தற்போது வந்துள்ள உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் கண்ணன் என்பவரால் பெரும் சிரமாக உள்ளது என்றும் தெரிவித்தார். கடந்த 2 வருடங்களாக கண்ணன் பணியில் இருக்கிறார் என்றும் அவர் ஊட்டி, நீலகிரி விவசாயிகளை வெளியேற்றும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்துள்ளதகாகவும் ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார். இதனால் தங்களின் வாழ்வாதாரம் நெருக்கடிக்கு தள்ளபட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.