ETV Bharat / state

கோவையில் தொடரும் கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

author img

By

Published : Aug 5, 2019, 12:10 PM IST

கோவை: இரவு முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்துவருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

noyyal river

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்துவரும் நிலையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் பரவலான மழை பெய்துவருகிறது.

அதன்படி கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும், மாநகர பகுதிகளான சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், சுந்தராபுரம் இடங்களிலும் இரவு முதலே பரவலாக மிதமான மழை பெய்துவருகிறது . இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் வெள்ளம்

இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் மழையால் கடந்த சில மாதங்களாக வறண்டுகிடந்த நொய்யல் ஆற்றிலும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்துவரும் நிலையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் பரவலான மழை பெய்துவருகிறது.

அதன்படி கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளிலும், மாநகர பகுதிகளான சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், சுந்தராபுரம் இடங்களிலும் இரவு முதலே பரவலாக மிதமான மழை பெய்துவருகிறது . இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் வெள்ளம்

இதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் மழையால் கடந்த சில மாதங்களாக வறண்டுகிடந்த நொய்யல் ஆற்றிலும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Intro:கோவையில் பல்வேறு பகுதிகளில் இரவு முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதித்துள்ளது.இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.......
Body:
தமிழகத்தின் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் பரவலான மழை பெய்து வருகிறது .அதன்படி கோவை மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், தடாகம் ,மலுமிச்சம்பட்டி, துடியலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மாநகர பகுதிகளான சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், கணபதி, ராமநாதபுரம், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு முதலே பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது .இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேவேளையில் இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளி கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை சற்றே பாதித்துள்ளது.

இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களாக வறண்டு கிடந்த நொய்யல் ஆற்றிலும் தண்ணீர் வர துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.