ETV Bharat / state

கோவை ஆழியாற்றில் மூழ்கி தாய், இரு மகள்கள் உயிரிழப்பு

author img

By

Published : May 15, 2020, 5:17 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஆழியாற்றில் மூழ்கி தாய் உள்பட இரு மகள்கள் உயிரிழந்தனர்.

ஆழியாறு
ஆழியாறு

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவுப் பகுதி கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள். கணவரை இழந்த அவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் சத்துணவு பணியாளராக பணியாற்றிவந்தார். அவருக்கு சந்தியா(18), சத்தியா(15) என இரு மகள்கள் இருந்தனர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை

அதையடுத்து அவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மகள்களுடன் ஆனைமலையில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று மதியம் துணி துவைக்க மகள்களுடன் அருகில் உள்ள ஆழியாற்றுக்குச் சென்றார். அப்போது ஆற்றில் இறங்கிய இளைய மகள் சத்தியா ஆழமான பகுதிக்கு சென்று தண்ணிரில் மூழ்கி உள்ளார்.

அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கண்ணம்மாள், மூத்த மகள் சந்தியா(18) இருவரும் சத்தியாவைக் காப்பாற்ற ஆற்றில் இறங்கியுள்ளார். அதில் எதிர்பாராதவிதமாக மூவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். அதையடுத்து அருகில் இருந்தவர்கள் மூழ்கியவர்களின் உடல்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆனைமலை காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஊரணியில் குளிக்கச்சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவுப் பகுதி கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள். கணவரை இழந்த அவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் சத்துணவு பணியாளராக பணியாற்றிவந்தார். அவருக்கு சந்தியா(18), சத்தியா(15) என இரு மகள்கள் இருந்தனர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை

அதையடுத்து அவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மகள்களுடன் ஆனைமலையில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று மதியம் துணி துவைக்க மகள்களுடன் அருகில் உள்ள ஆழியாற்றுக்குச் சென்றார். அப்போது ஆற்றில் இறங்கிய இளைய மகள் சத்தியா ஆழமான பகுதிக்கு சென்று தண்ணிரில் மூழ்கி உள்ளார்.

அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கண்ணம்மாள், மூத்த மகள் சந்தியா(18) இருவரும் சத்தியாவைக் காப்பாற்ற ஆற்றில் இறங்கியுள்ளார். அதில் எதிர்பாராதவிதமாக மூவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். அதையடுத்து அருகில் இருந்தவர்கள் மூழ்கியவர்களின் உடல்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆனைமலை காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: ஊரணியில் குளிக்கச்சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.