ETV Bharat / state

"விரைவில் இரு மாநில முதலமைச்சர்களின் சந்திப்பு"- சிறுவாணி குறித்து திருவாய்மலர்ந்த கேரள அமைச்சர் - நீர்வளத்துறை அமைச்சர்  கிருஷ்ணன் குட்டி

கோவை: தமிழ்நாடு, கேரளா தண்ணீர் பிரச்னை குறித்து இரு மாநில முதலைச்சர்கள் பேச உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர்  கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணன் குட்டி
author img

By

Published : Sep 8, 2019, 11:57 PM IST

கோவை மாவட்டம் சூலூர் ஏரோ கிளப் சார்பில் கொங்கு கல்யாண மண்டபத்தில் ஓணம் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கேரள நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், தமிழ்நாட்டிலிருந்து அனைத்து பொருட்களையும் கேரளாவிற்கு தமிழ்நாடு மக்கள் தாராளமாக அனுப்பி வைக்கின்றனர். அதேபோல், தமிழ்நாட்டிற்குத் தேவையான தண்ணீரை பாகுபாடின்றி திறந்துவிட கேரள அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.

சூலூர் ஏரோ கிளப் சார்பில் ஓணம் விழா கொண்டாட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி;" தமிழ்நாட்டில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக கேரள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்மாடு மக்கள், கேரள மக்கள் என்று எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை. சிறுவாணி தண்ணீர் பிரச்னை குறித்து வருகின்ற 26ஆம் தேதி தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள் சந்தித்து பேச உள்ளனர். அப்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும்" என்று கூறினார்.

கோவை மாவட்டம் சூலூர் ஏரோ கிளப் சார்பில் கொங்கு கல்யாண மண்டபத்தில் ஓணம் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், கேரள நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், தமிழ்நாட்டிலிருந்து அனைத்து பொருட்களையும் கேரளாவிற்கு தமிழ்நாடு மக்கள் தாராளமாக அனுப்பி வைக்கின்றனர். அதேபோல், தமிழ்நாட்டிற்குத் தேவையான தண்ணீரை பாகுபாடின்றி திறந்துவிட கேரள அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தினார்.

சூலூர் ஏரோ கிளப் சார்பில் ஓணம் விழா கொண்டாட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி;" தமிழ்நாட்டில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக கேரள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்மாடு மக்கள், கேரள மக்கள் என்று எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை. சிறுவாணி தண்ணீர் பிரச்னை குறித்து வருகின்ற 26ஆம் தேதி தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள் சந்தித்து பேச உள்ளனர். அப்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும்" என்று கூறினார்.

Intro:தமிழ்நாடு கேரளா தண்ணீர் பிரச்சனைகளுக்கு வரும் 26ஆம் தேதி இரு மாநில முதல்வர்கள் பேசி முடிவு செய்வார்கள். கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி பேட்டி.Body:தமிழ்நாடு கேரளா தண்ணீர் பிரச்சனைகளுக்கு வரும் 26ஆம் தேதி இரு மாநில முதல்வர்கள் பேசி முடிவு செய்வார்கள் சூலூரில் நடைபெற்ற ஓணம் பண்டிகை துவக்க விழாவில் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி பேட்டி.

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஓணம் பண்டிகைகளின் துவக்க விழாவில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் பேசிய துணை சபாநாயகர் தமிழகத்திலிருந்து அனைத்து பொருட்களையும் கேரளாவிற்கு தாராளமாக தமிழக மக்கள் அனுப்பி வைப்பதால் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பாகுபாடின்றி திறந்துவிட கேரளா அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து பேசிய கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தமிழக மக்கள் கேரள மக்கள் என்று தனித்தனியாக வித்தியாசம் பார்ப்பதில்லை எனவும் தமிழகத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக கேரள மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பாகுபாடின்றி வழங்கப்படும் எனவும் கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் தண்ணீர் பிரச்சனை குறித்து வரும் 26-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்கள் சந்தித்து பேச உள்ளதாகவும் அப்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று கூறினார். மேலும் இந்த விழாவில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

கோவை
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.