கோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வரும் ஏர் அரேபியா விமானம் வந்தது. விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த பயணிகளை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது இரண்டு இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் அவர்கள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச்சேர்ந்த ஜியாவுல் ஹக்(23), கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அமீர் சோகைல்(23) என்பது தெரியவந்தது. பின்பு அதிகாரிகள் அவர்களது பை உள்ளிட்ட உடைமைகளை சோதனை செய்தனர்.
![gold seized in coimbatore airport](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-03-airport-gold-seized-7208104_06092019191655_0609f_1567777615_361.jpg)
பின்னர் அவர்களை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில், 24 காரட் தூய தங்கத்தை பவுடராக்கி, அதை பசையில் கலந்து அவர்கள் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டின் உட்புறமாக வைத்தும், ஆசான வாயில் மறைத்தும் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்து 42 லட்சத்து 15 ஆயிரத்து 258 ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 81 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.