ETV Bharat / state

கேரளாவில் கள்ள நோட்டுகள் வைத்திருந்த இருவர் கைது

author img

By

Published : Apr 22, 2021, 11:52 AM IST

கேரளா: உதயம்பூரில் கள்ள நோட்டுகள் வைத்திருந்த இருவரை காவல் துறையின கைது செய்தனர்.

கேரளா
கேரளா

கேரளா மாநிலம் எர்ணாகுளம் உதயம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகக் கேரளா தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் கடந்த மார்ச் 28ஆம் தேதி கேரளா காவல்துறையினர் கோவையைச் சேர்ந்த பிரியன்லால் என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து நேற்றிரவு (ஏப்ரல்.21) அவரிடம் கேரளா தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை செய்தபோது, கோவை உக்கடம் அல் அமீன் காலணியில் உள்ள அஸ்ரப் அலி (21) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளுமாறு கூறினார்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில், 8 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அஸ்ரப் கொடுத்த தகவல் அடிப்படையில் கரும்பு கடையைச் சேர்ந்த சயது சுல்தான் (32) வீட்டில் கேரளா காவல்துறையினர் சோதனையிட்ட போது அங்கு ரூ.1.80 கோடி மதிப்பிலான, 2 ஆயிரம் நோட்டு கட்டுகள் இருந்தன.

இதையடுத்து சயது சுல்தான், அஸ்ரப் ஆகிய இருவரையும் கைது செய்த கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் பணத்தையும் பறிமுதல் செய்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் உதயம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகக் கேரளா தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் கடந்த மார்ச் 28ஆம் தேதி கேரளா காவல்துறையினர் கோவையைச் சேர்ந்த பிரியன்லால் என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து நேற்றிரவு (ஏப்ரல்.21) அவரிடம் கேரளா தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை செய்தபோது, கோவை உக்கடம் அல் அமீன் காலணியில் உள்ள அஸ்ரப் அலி (21) என்பவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளுமாறு கூறினார்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில், 8 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அஸ்ரப் கொடுத்த தகவல் அடிப்படையில் கரும்பு கடையைச் சேர்ந்த சயது சுல்தான் (32) வீட்டில் கேரளா காவல்துறையினர் சோதனையிட்ட போது அங்கு ரூ.1.80 கோடி மதிப்பிலான, 2 ஆயிரம் நோட்டு கட்டுகள் இருந்தன.

இதையடுத்து சயது சுல்தான், அஸ்ரப் ஆகிய இருவரையும் கைது செய்த கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் பணத்தையும் பறிமுதல் செய்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.