ETV Bharat / state

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த திமுக கூட்டணி தீர்மானம்

கோவை : உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும்  என்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சார்பில், திமுக அலுவலகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

author img

By

Published : Jun 2, 2019, 7:53 AM IST

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த திமுக கூட்டணி தீர்மானம்

கோவையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திமுக தலைமை அலுவலகத்தில் ஜூன் 1ஆம் தேதி நடைபெற்றது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோடைகாலம் முடிந்த நிலையிலும் கோவை மாநகராட்சி சரியான முறையில் குடிநீர் வழங்காமல் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த திமுக கூட்டணி தீர்மானம்

2010ஆம் ஆண்டு திமுக அறிவித்த எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் பணிகள் தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளது. உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 7ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போகிறோம். மேலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு கூட தீர்வு ஏற்படவில்லை எனவே உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கோவையில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், திமுக தலைமை அலுவலகத்தில் ஜூன் 1ஆம் தேதி நடைபெற்றது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோடைகாலம் முடிந்த நிலையிலும் கோவை மாநகராட்சி சரியான முறையில் குடிநீர் வழங்காமல் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த திமுக கூட்டணி தீர்மானம்

2010ஆம் ஆண்டு திமுக அறிவித்த எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் பணிகள் தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளது. உடனடியாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 7ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போகிறோம். மேலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு கூட தீர்வு ஏற்படவில்லை எனவே உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Intro:உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் அதிகரித்துள்ளது உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில்ன் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..


Body:மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் காந்திபுரத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு திமுக அறிவித்த எஸ் ஐ ஹெச் எஸ் காலனி ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் பணிகள் தற்போது வரை முடிக்கப்படாமல் உள்ளது இழப்பீட்டு தொகை உரிய நேரத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தியது காரணம் எனவும் இதனால் நீதிமன்றம் வரை இந்த வழக்கு சென்று தற்போது வழக்கு நடைபெற்று வருவதாகவும்,உடனடியாக மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 7 ம் தேதி அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வது. கோவை மாநகராட்சி முழுவதும் கோடை காலம் முடிந்த காலகட்டத்திலும் மாநகராட்சி நிர்வாகம் சரியான முறையில் குடிநீர் வழங்காமல் மாநகரில் உள்ள பல்வேறு பகுதி மக்களுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்குவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு கூட தீர்வு ஏற்படவில்லை எனவே உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டும்,வெற்றி பெற்ற கோவை நாடாளுமன்ற பி.ஆர் நடராஜனுக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் வாழ்த்து தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.