ETV Bharat / state

இருசக்கர வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்!

author img

By

Published : Aug 18, 2020, 10:50 PM IST

கோவை: பொள்ளாச்சி அருகே ஆழியார் - வால்பாறை சாலையில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death-in-a-motorcycle-accident-two-people-one-injured
death-in-a-motorcycle-accident-two-people-one-injured

கோவை மாவட்டம் ஆழியார் அகதிகள் முகாமைச் சேர்ந்த பெயிண்டர் அலன். கோட்டூர் அகதிகள் முகாமை சேர்ந்த வசந்தகுமார், அஜித் குமார் என்ற இரு நண்பர்கள் உள்ளனர்.

இந்நிலையில் வசந்த குமார், அஜித் குமார் இருவரும் ஆலனைச் சந்திக்க இருசக்கர வாகனம் மூலம் ஆழியாறு சென்றுள்ளனர்.

அதன் பின் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் ஆழியாறு சோதனைச்சவடி வரை சென்று விட்டு, மூண்டும் அகதிகள் முகாமிற்கு திரும்பியுள்ளார்.

அவர்கள் மூகாமை நோக்கி வரும் வழியில் கட்டுப்பட்டை இழந்த இருசக்ர வாகனம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆலன், வசந்த குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் அஜித் குமார் பலத்த காயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழியார் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நூதன முறையில் லட்சக்கணக்கில் மோசடி - காவல்துறை விசாரணை!

கோவை மாவட்டம் ஆழியார் அகதிகள் முகாமைச் சேர்ந்த பெயிண்டர் அலன். கோட்டூர் அகதிகள் முகாமை சேர்ந்த வசந்தகுமார், அஜித் குமார் என்ற இரு நண்பர்கள் உள்ளனர்.

இந்நிலையில் வசந்த குமார், அஜித் குமார் இருவரும் ஆலனைச் சந்திக்க இருசக்கர வாகனம் மூலம் ஆழியாறு சென்றுள்ளனர்.

அதன் பின் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் ஆழியாறு சோதனைச்சவடி வரை சென்று விட்டு, மூண்டும் அகதிகள் முகாமிற்கு திரும்பியுள்ளார்.

அவர்கள் மூகாமை நோக்கி வரும் வழியில் கட்டுப்பட்டை இழந்த இருசக்ர வாகனம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆலன், வசந்த குமார் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் அஜித் குமார் பலத்த காயங்களுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழியார் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:நூதன முறையில் லட்சக்கணக்கில் மோசடி - காவல்துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.