ETV Bharat / state

கரோனா பாதிப்பு - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவி

author img

By

Published : Apr 21, 2020, 5:58 PM IST

Updated : May 19, 2020, 5:52 PM IST

கோவை: ஊஞ்சவேலம்பட்டியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவி
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவி

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதற்கான பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் கடுமையாகப் பணியாற்றி வருகின்றனர். மேலும் ஊரடங்கால் ஏழை, நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், ஊஞ்சவேலம்பட்டியில் 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு காய்கறி தொகுப்புகளை கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள முக்கியப் பகுதிகளுக்கு கிருமி நாசினி மருந்தை அமைச்சர் தெளித்தார்.

இதில் சார் ஆட்சியர் வைத்தியநாதன், ஊராட்சி மன்றத் தலைவர் சபரி நித்தியா, முருகானந்தம், ஊராட்சி கழகச் செயலாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு - கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் சோதனை

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதற்கான பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் கடுமையாகப் பணியாற்றி வருகின்றனர். மேலும் ஊரடங்கால் ஏழை, நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், ஊஞ்சவேலம்பட்டியில் 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு காய்கறி தொகுப்புகளை கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள முக்கியப் பகுதிகளுக்கு கிருமி நாசினி மருந்தை அமைச்சர் தெளித்தார்.

இதில் சார் ஆட்சியர் வைத்தியநாதன், ஊராட்சி மன்றத் தலைவர் சபரி நித்தியா, முருகானந்தம், ஊராட்சி கழகச் செயலாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு - கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் சோதனை

Last Updated : May 19, 2020, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.