ETV Bharat / state

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு - கோவை விவசாயிகள் வேதனை!

author img

By

Published : Apr 20, 2023, 4:44 PM IST

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டி வருகிறது. இதன் காரணமாக கோடை காலங்கலில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

கோவை விவசாயிகள் வேதனை
கோவை விவசாயிகள் வேதனை

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு - தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கண்டனம்

கோவை:கோயம்புத்தூர் மாநகரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மற்றும் பவானி அணைகள் இருந்து வருகின்றன. கேரள மாநிலத்திற்கு உட்பட்ட முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சிறுவாணி அணையும், கோவை மாவட்டம் காரமடை அருகேவுள்ள பில்லூர் அணையும் கோவையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன‌.

இதனிடையே பவானி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பையும் மீறி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள அரசு தடுப்பணைகளை கட்டியுள்ளது. இந்த நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது.

அட்டப்பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. ஆற்றை மறித்து கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமானப் பணிகள் 90 விழுக்காடு அளவிற்கு முடிவடைந்துள்ளது. மேலும், 2 இடங்களில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கோடை காலங்களில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இது தமிழ்நாடு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது, "சிறுவாணி மற்றும் பவானி ஆறுகள் காவிரி ஆற்றின் கிளை நதிகளாக இருந்து வருகிறது. இந்த ஆறுகளின் குறுக்கே எந்தவித கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் காவிரி மேலாண்மை வாரியத்தில் அனுமதி பெற வேண்டும். ஆனால், கேரள அரசு எவ்வித அனுமதியும் பெறாமல் தடுப்பணைகளை கட்டி வருகிறது.

ஏற்கனவே பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு எழுந்ததால் அம்முயற்சியை கேரள அரசு கைவிட்ட நிலையில், பவானி ஆற்றின் குறுக்கே சில இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பையும் மீறி தடுப்பணைகளை சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டியது. சிறுவாணி அணையில் கோடை காலங்களில் தண்ணீர் எடுத்து வந்த சுரங்கப்பாதையும் கேரள அரசு மூடி விட்டது.

தற்போது சிறுவாணி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணைகளை கட்டி வருகிறது. இதனால், கோடை காலங்களில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறையவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. தமிழ்நாடு அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பணைகள் கட்டுமானப் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் " எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசினை வன்மையாக கண்டித்துள்ளார், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மேலும், இதனால் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாரிமுனை அடுக்குமாடி கட்டட விபத்து எதிரொலி.. பழைய கட்டடங்களை ஆய்வு செய்து இடிக்க மாநகராட்சி முடிவு!

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு - தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கண்டனம்

கோவை:கோயம்புத்தூர் மாநகரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மற்றும் பவானி அணைகள் இருந்து வருகின்றன. கேரள மாநிலத்திற்கு உட்பட்ட முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சிறுவாணி அணையும், கோவை மாவட்டம் காரமடை அருகேவுள்ள பில்லூர் அணையும் கோவையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன‌.

இதனிடையே பவானி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பையும் மீறி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள அரசு தடுப்பணைகளை கட்டியுள்ளது. இந்த நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது.

அட்டப்பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. ஆற்றை மறித்து கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமானப் பணிகள் 90 விழுக்காடு அளவிற்கு முடிவடைந்துள்ளது. மேலும், 2 இடங்களில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கோடை காலங்களில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது. இது தமிழ்நாடு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது, "சிறுவாணி மற்றும் பவானி ஆறுகள் காவிரி ஆற்றின் கிளை நதிகளாக இருந்து வருகிறது. இந்த ஆறுகளின் குறுக்கே எந்தவித கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் காவிரி மேலாண்மை வாரியத்தில் அனுமதி பெற வேண்டும். ஆனால், கேரள அரசு எவ்வித அனுமதியும் பெறாமல் தடுப்பணைகளை கட்டி வருகிறது.

ஏற்கனவே பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு எழுந்ததால் அம்முயற்சியை கேரள அரசு கைவிட்ட நிலையில், பவானி ஆற்றின் குறுக்கே சில இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் அமைப்பினர் எதிர்ப்பையும் மீறி தடுப்பணைகளை சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டியது. சிறுவாணி அணையில் கோடை காலங்களில் தண்ணீர் எடுத்து வந்த சுரங்கப்பாதையும் கேரள அரசு மூடி விட்டது.

தற்போது சிறுவாணி ஆற்றின் குறுக்கேயும் தடுப்பணைகளை கட்டி வருகிறது. இதனால், கோடை காலங்களில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறையவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. தமிழ்நாடு அரசு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பணைகள் கட்டுமானப் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் " எனத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசினை வன்மையாக கண்டித்துள்ளார், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மேலும், இதனால் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாரிமுனை அடுக்குமாடி கட்டட விபத்து எதிரொலி.. பழைய கட்டடங்களை ஆய்வு செய்து இடிக்க மாநகராட்சி முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.