கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டம் ஆழியாறு அணையிலிருந்து இரண்டாம்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழ்நாடு அரசுக்கு வேளாண் பெருங்குடி மக்கள் வேண்டுகோள்விடுத்தனர்.
இதனையேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்பேரில், ஆழியாறு பழைய ஐந்து வாய்க்கால்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம்போக பாசனத்திற்கு நவ.6 ஆம் தேதி முதல் நவ. 15 ஆம் தேதி வரை 160 நாள்களுக்கு, ஆழியாறு அணையிலிருந்து ஆயிரத்து 137 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால், கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை வட்டத்திலுள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறுவார்கள் என வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு தெரிவித்தார்.
இதில், உதவி ஆட்சியர் வைத்தியநாதன், ஒன்றிய செயலாளர்கள் சுந்திரம், அப்புசாமி கார்த்திகேயன், வாசு, செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலா, அணை உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல், காடம்பாறை நீர் ஏற்று மின் உற்பத்தி வட்டம் கண்காணிப்பு பொறியாளர் ரஃபிக் அகமது, நவமலை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு