ETV Bharat / state

காசாளர் பழனிச்சாமி மரணம் - ஐடி அதிகாரிகள் மீது மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

கோவை: வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் மார்ட்டினின் பணம் குறித்த விவரங்களை அவரது காசாளர் பழனிசாமி சொல்லியதால்தான் கொலை செய்யப்பட்டதாக பழனிசாமி மனைவி சாந்தாமணி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

author img

By

Published : May 6, 2019, 7:21 PM IST

சாந்தாமணி

தொழிலதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் மனைவி சாந்தாமணி மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யாவிடம் இன்று புகார் மனு அளித்தார். மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரது மனைவி சாந்தாமணி, பழனிசாமி மரணத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகளும், மார்ட்டின் நிறுவனத்தினருமே காரணமென பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பழனிசாமியை வருமான வரித்துறை அதிகாரிகள் சாதியை சொல்லி இழிவுபடுத்தியதாகவும், ரெய்டு செய்யவந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தனது கணவரை விடிய, விடிய அடித்து துன்புறுத்தியதோடு, கழுத்தை நெறித்து ,கையை அறுத்ததாகவும் அவர் கூறினார்.

காவல்துறை அதிகாரிகள் 3 கோடி தருவதாக பேரம் பேசியதாக குற்றம்சாட்டிய அவர், தங்களது வீட்டை சீல் வைத்து விடுவேன் என காவல்துறை மிரட்டுகின்றனர் எனக்கூறினார். டி.எஸ்.பி மணி தங்களை மிரட்டுவதாகவும், அவரை இடமாற்றம் செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது தனது கணவர் மார்ட்டினின் பணம் குறித்த விவரங்களை சொல்லியதால் தான், மார்ட்டின் நிறுவனத்தினர் அவரை அடித்து கொலை செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார். மேலும் மார்ட்டின் நிறுவன ஊழியர்கள் கென்னடி, ராஜா, பிரகாஷ், வேதமுத்து ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். மார்ட்டின், அவரது மனைவி லீமாரோஸ், மார்டின் நிறுவனத்தினர் மீதும், வருமான வரித்துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும், அதுவரை உடலை வாங்க போவதில்லை எனவும் அவர் கூறினார்.

தொழிலதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் மனைவி சாந்தாமணி மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யாவிடம் இன்று புகார் மனு அளித்தார். மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரது மனைவி சாந்தாமணி, பழனிசாமி மரணத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகளும், மார்ட்டின் நிறுவனத்தினருமே காரணமென பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பழனிசாமியை வருமான வரித்துறை அதிகாரிகள் சாதியை சொல்லி இழிவுபடுத்தியதாகவும், ரெய்டு செய்யவந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தனது கணவரை விடிய, விடிய அடித்து துன்புறுத்தியதோடு, கழுத்தை நெறித்து ,கையை அறுத்ததாகவும் அவர் கூறினார்.

காவல்துறை அதிகாரிகள் 3 கோடி தருவதாக பேரம் பேசியதாக குற்றம்சாட்டிய அவர், தங்களது வீட்டை சீல் வைத்து விடுவேன் என காவல்துறை மிரட்டுகின்றனர் எனக்கூறினார். டி.எஸ்.பி மணி தங்களை மிரட்டுவதாகவும், அவரை இடமாற்றம் செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது தனது கணவர் மார்ட்டினின் பணம் குறித்த விவரங்களை சொல்லியதால் தான், மார்ட்டின் நிறுவனத்தினர் அவரை அடித்து கொலை செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார். மேலும் மார்ட்டின் நிறுவன ஊழியர்கள் கென்னடி, ராஜா, பிரகாஷ், வேதமுத்து ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். மார்ட்டின், அவரது மனைவி லீமாரோஸ், மார்டின் நிறுவனத்தினர் மீதும், வருமான வரித்துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும், அதுவரை உடலை வாங்க போவதில்லை எனவும் அவர் கூறினார்.

சு.சீனிவாசன்.     கோவை


வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது மார்ட்டினின் பணம் குறித்த விவரங்களை சொல்லியதால் காசாளர் பழனிசாமியை மார்டின் நிறுவனத்தினர் அடித்து கொலை செய்துள்ளதாக அவரது மனைவி சாந்தாமணி தெரிவித்துள்ளார்.


தொழிலதிபர் மார்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் மனைவி சாந்தாமணி மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யாவிடம் புகார் மனு அளித்தார். அதில்  பழனிசாமி மரணம் தொடர்பாக மார்டின் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் 
பழனிசாமியை சாதி சொல்லி திட்டிய அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும்,  மார்டின் நிறுவன உரிமையாளர்களால் அச்சுறுத்தல் இருப்பதால் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஐ.ஜியிடம் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரது மனைவி சாந்தாமணி, பழனிசாமி மரணத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகளும், மார்டின் நிறுவனத்தினருமே காரணமென தெரிவித்தார். பழனிசாமியை வருமான வரித்துறை அதிகாரிகள் சாதியை சொல்லி இழிவுபடுத்தியதாகவும், ரெய்டு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தனது கணவரை விடிய, விடிய அடித்து துன்புறுத்தியதோடு, கழுத்தை நெறித்து ,கையை அறுத்ததாகவும் அவர் கூறினார். 3 கோடி தருவதாக காவல்துறை அதிகாரிகள் பேரம் பேசியதாகவும், எங்களது வீட்டை சீல் வைத்து விடுவேன் என காவல் துறை மிரட்டுகின்றனர் எனவும் கூறிய அவர்,  டி.எஸ்.பி மணி தங்களை மிரட்டுவதாகவும், பணம் வாங்கிக் கொண்டு விலகி விடுமாறு மிரட்டல் விடுக்கின்றார் என தெரிவித்தார். டிஎஸ்பி மணி மீது ஐஜியிடம் புகார் அளித்துள்ளதாகவும், அவரை இடமாற்றம் செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
லீமா ரோஸ் எங்களிடம் நேரடியாக பேசவில்லை எனவும், டிரைவர் மூலமாக வருமான வரித்துறை மீது புகார் கொடுக்க சொல்லி மிரட்டுகின்றனர் எனவும் அவர் கூறினார்.  வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது மார்ட்டினின் பணம் குறித்த விவரங்களை சொல்லியதால் தான், மார்டின் நிறுவனத்தினர் அடித்து கொலை செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார். மேலும் மார்டின் நிறுவன ஊழியர்கள் கென்னடி, ராஜா, பிரகாஷ்,வேதமுத்து, ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மார்ட்டின், அவரது மனைவி லீமாரோஸ், மார்டின் நிறுவனத்தினர் மீதும்,வருமான வரித்துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அதுவரை உடலை வாங்க போவதில்லை எனவும் அவர் கூறினார்.
 பேட்டி அளிக்கும் போது பத்திரிகையாளர்களுக்கும் , சாந்தமணிக்கு ஆதரவாக வந்த அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் லேசான தள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Video in reporter app

TN_CBE_1_6_SUICIDE ISSUE_PETITION TO IG_9020856
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.