ETV Bharat / state

கோவையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்.. தீவிர விசாரணையில் போலீசார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 1:43 PM IST

Bomb threat in Coimbatore: கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்கும் என சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி சென்றுள்ள நிலையில், கோவையில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Bomb threat in Coimbatore
கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பிய நபர்

கோயம்புத்தூர்: சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

மேலும், அந்த இமெயிலில் ‘பாஜக அலுவலகம், மோடி ஒழிக..’ என்ற வாசகங்களும் இடம் பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை மாநகர காவல் துறையினர் நேற்று இரவு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தினர். குறிப்பாக, கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகம் உள்பட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலமாக போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த இமெயில் குறுஞ்செய்தி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அந்த மின்னஞ்சல் முகவரியானாது (மெயில் ஐடி), சாத்தூரைச் சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மொய்தீன் பாய் பொங்கலுக்கு வருகிறார்..! லால்சலாம் டீசருடன் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!

கோயம்புத்தூர்: சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

மேலும், அந்த இமெயிலில் ‘பாஜக அலுவலகம், மோடி ஒழிக..’ என்ற வாசகங்களும் இடம் பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை மாநகர காவல் துறையினர் நேற்று இரவு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தினர். குறிப்பாக, கோவை காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகம் உள்பட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலமாக போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த இமெயில் குறுஞ்செய்தி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அந்த மின்னஞ்சல் முகவரியானாது (மெயில் ஐடி), சாத்தூரைச் சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அந்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மொய்தீன் பாய் பொங்கலுக்கு வருகிறார்..! லால்சலாம் டீசருடன் வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.