ETV Bharat / state

“இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க மாட்டார்” - அண்ணாமலை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 1:15 PM IST

Updated : Oct 15, 2023, 2:18 PM IST

Annamalai Press Meet: சபாநாயகர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பஜாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு தி.மு.கவிற்கு தகுதி இல்லை
பஜாக மாநில தலைவர் அண்ணாமலை
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது, “நேற்று திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தந்தை மற்றும் உறவினர்களின் பெயர்களை வைத்து அரசியலுக்கு வந்தவர்களே மேடையில் அமர்ந்திருந்தனர். இந்த மகளிர் உரிமை மாநாடு ஒரு நாடகம்.

இந்நிலையில், எந்த வித பின்னணியும் இல்லாமல் தடைகளை உடைத்து, அரசியலுக்கு வரும் சாதாரண பெண்மணிகளுக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள 33 சதவீத இடஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு தகுதி இல்லை. மேலும், சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதை விட, திமுகவை வளர்ப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளனர்.

மேலும், திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று திமுக பகுதி செயலாளர் மிரட்டல் விடுத்த நிலையில், இவர்கள் மகளிர் உரிமை மாநாட்டை நடத்துகின்றனர்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பத்திரிகையாளர்கள் யாரையும் நான் புண்படுத்தவில்லை. போலி பத்திரிகையாளர் சங்கங்கள் பல முறை என்னை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள், கடுமையாக கேள்வி கேட்கிறார்கள். எனவே, அவர்களுக்கு கடுமையாக பதில் சொல்கிறேன். நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு நான் என்றும் ஆதரவாக இருப்பேன். போலி பத்திரிக்கையாளர்கள் என்னை விமர்சனம் செய்வதை நான் என்றும் கண்டு கொள்ளமாட்டேன்” என்றார்.

இதனையடுத்து, “பாஜகவைப் பொறுத்தவரை தமிழகத்தில் கட்சியை வலிமைப்படுத்தவே மாநிலம் முழுவதும் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். மக்கள் வரிப்பணத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் திமுகவினர். எனவே, அவர்களை எதிர்த்து ஆக்கப்பூர்வமாக தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டியது, ஒரு எதிர்கட்சியின் கடமை என்பதால் அதைத்தான் பாஜக செய்கிறது” என்றார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “பாஜக கூட்டனி குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுவதெல்லாம் அவரது சொந்த கருத்து. இன்னொரு கட்சியின் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. கூட்டணி குறித்த கேள்விகளுக்கும், கருத்துகளுக்கும் தேசிய தலைமையே கருத்து சொல்லும்” என கூறினார்.

மேலும், “தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் கண்ணியமான இருக்கையில் இருப்பதாகவும், இரண்டு முறை சட்டசபையில் வானதி சீனிவாசன் பேச முயன்றும் பேச அனுமதிப்பதில்லை என்றும், சபாநாயகர் தன்னை சுயபரிசோதனை செய்து கொண்டு, கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிக்க வேண்டும். மேலும், சட்டப்பேரவையில் டிவி நிகழ்ச்சியின் விவாதத்தில் பேசுவதுபோல சபாநயகர் தனது சொந்த கருத்தை பேசுகிறார்” என்று கூறினார்.

இதனையடுத்து, இஸ்லாமிய சிறைசிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தீவிரவாதிகளுக்கு மதச்சாயம் பூச பாஜக விரும்பவில்லை. தீவிரவாதம் செய்ய நினைத்தவர்கள் சிறையில்தான் இருக்க வேண்டும். ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார். தீவிரவாதத்திற்கு அவர் என்றும் துணை நிற்க மாட்டார்.

மேலும், விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று கூறுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த வித அருகதையும் கிடையாது எனவும், அப்படி பேசும் உதயநிதி ஸ்டாலின் எதற்காக சனாதனத்தைப் பற்றி மட்டும் விமர்சிக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: ஆதித்யா எல்1 விண்கலம் எப்போது லெக்ராஞ்ச் புள்ளியை அடையும்? - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்!

அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது, “நேற்று திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தந்தை மற்றும் உறவினர்களின் பெயர்களை வைத்து அரசியலுக்கு வந்தவர்களே மேடையில் அமர்ந்திருந்தனர். இந்த மகளிர் உரிமை மாநாடு ஒரு நாடகம்.

இந்நிலையில், எந்த வித பின்னணியும் இல்லாமல் தடைகளை உடைத்து, அரசியலுக்கு வரும் சாதாரண பெண்மணிகளுக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள 33 சதவீத இடஒதுக்கீடு பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு தகுதி இல்லை. மேலும், சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதை விட, திமுகவை வளர்ப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளனர்.

மேலும், திமுக கூட்டத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று திமுக பகுதி செயலாளர் மிரட்டல் விடுத்த நிலையில், இவர்கள் மகளிர் உரிமை மாநாட்டை நடத்துகின்றனர்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பத்திரிகையாளர்கள் யாரையும் நான் புண்படுத்தவில்லை. போலி பத்திரிகையாளர் சங்கங்கள் பல முறை என்னை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள், கடுமையாக கேள்வி கேட்கிறார்கள். எனவே, அவர்களுக்கு கடுமையாக பதில் சொல்கிறேன். நேர்மையான பத்திரிகையாளர்களுக்கு நான் என்றும் ஆதரவாக இருப்பேன். போலி பத்திரிக்கையாளர்கள் என்னை விமர்சனம் செய்வதை நான் என்றும் கண்டு கொள்ளமாட்டேன்” என்றார்.

இதனையடுத்து, “பாஜகவைப் பொறுத்தவரை தமிழகத்தில் கட்சியை வலிமைப்படுத்தவே மாநிலம் முழுவதும் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். மக்கள் வரிப்பணத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் திமுகவினர். எனவே, அவர்களை எதிர்த்து ஆக்கப்பூர்வமாக தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டியது, ஒரு எதிர்கட்சியின் கடமை என்பதால் அதைத்தான் பாஜக செய்கிறது” என்றார்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “பாஜக கூட்டனி குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுவதெல்லாம் அவரது சொந்த கருத்து. இன்னொரு கட்சியின் கருத்துக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. கூட்டணி குறித்த கேள்விகளுக்கும், கருத்துகளுக்கும் தேசிய தலைமையே கருத்து சொல்லும்” என கூறினார்.

மேலும், “தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் கண்ணியமான இருக்கையில் இருப்பதாகவும், இரண்டு முறை சட்டசபையில் வானதி சீனிவாசன் பேச முயன்றும் பேச அனுமதிப்பதில்லை என்றும், சபாநாயகர் தன்னை சுயபரிசோதனை செய்து கொண்டு, கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் சட்டப்பேரவையில் பேச வாய்ப்பளிக்க வேண்டும். மேலும், சட்டப்பேரவையில் டிவி நிகழ்ச்சியின் விவாதத்தில் பேசுவதுபோல சபாநயகர் தனது சொந்த கருத்தை பேசுகிறார்” என்று கூறினார்.

இதனையடுத்து, இஸ்லாமிய சிறைசிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தீவிரவாதிகளுக்கு மதச்சாயம் பூச பாஜக விரும்பவில்லை. தீவிரவாதம் செய்ய நினைத்தவர்கள் சிறையில்தான் இருக்க வேண்டும். ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்க மாட்டார். தீவிரவாதத்திற்கு அவர் என்றும் துணை நிற்க மாட்டார்.

மேலும், விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று கூறுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த வித அருகதையும் கிடையாது எனவும், அப்படி பேசும் உதயநிதி ஸ்டாலின் எதற்காக சனாதனத்தைப் பற்றி மட்டும் விமர்சிக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: ஆதித்யா எல்1 விண்கலம் எப்போது லெக்ராஞ்ச் புள்ளியை அடையும்? - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்!

Last Updated : Oct 15, 2023, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.