விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உரங்களை ரகசிய கிடங்கில் பதுக்கிவைத்து கேரளாவிற்கு கடத்தி வருவதாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடுத்து ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு கிடங்கை ஆய்வு செய்தனர். அப்போது தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் 12 டன் யூரியா எவ்வித உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சார் ஆட்சியர் நடத்திய தீவிர விசாரணையில், விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உரத்தை கேரளாவிற்கு ரகசியமாக கடத்தி வருவது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து கோயம்புத்தூரில் உள்ள வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் புனிதாவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட புனிதா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியுடன் 12 டன் யூரியா உரத்தை பறிமுதல் செய்தார்.
இதன் மதிப்பு 1 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் ஆகும். தற்போது யூரியாவை கடத்தி வந்த லாரி ஓட்டுநர் விசாரணையின் போது தப்பியோடியுள்ளார்.
கிடங்கு உரிமையாளர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து தாசில்தார் தணிகைவேல், வருவாய்த் துறையினர் கிடங்கிற்கு சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மானிய விலை யூரியா உரங்களை கேரளாவிற்கு கடத்த முயற்சி - லாரி பறிமுதல்
கோயம்புத்தூர்: உரிய ஆவணங்கள் இன்றி பொள்ளாச்சி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 12 டன் யூரியா உரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உரங்களை ரகசிய கிடங்கில் பதுக்கிவைத்து கேரளாவிற்கு கடத்தி வருவதாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடுத்து ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு கிடங்கை ஆய்வு செய்தனர். அப்போது தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும் 12 டன் யூரியா எவ்வித உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சார் ஆட்சியர் நடத்திய தீவிர விசாரணையில், விவசாயிகளுக்கு வேளாண்மை துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் யூரியா உரத்தை கேரளாவிற்கு ரகசியமாக கடத்தி வருவது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து கோயம்புத்தூரில் உள்ள வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் புனிதாவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட புனிதா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியுடன் 12 டன் யூரியா உரத்தை பறிமுதல் செய்தார்.
இதன் மதிப்பு 1 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் ஆகும். தற்போது யூரியாவை கடத்தி வந்த லாரி ஓட்டுநர் விசாரணையின் போது தப்பியோடியுள்ளார்.
கிடங்கு உரிமையாளர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இதனையடுத்து தாசில்தார் தணிகைவேல், வருவாய்த் துறையினர் கிடங்கிற்கு சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.