கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் பசீர் அகமது. இவரது நண்பர்களான மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மூன்று பேர் உடன் கேரளாவில் இருந்து கோவை நோக்கி இவர் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கார் சூலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த மினி லாரி நேருக்கு நேர் வந்து காருடன் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மூன்றுபேரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பஷீர் அகமது தவிர உயிரிழந்த நான்கு பேரின் விவரம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.