கோவையில் இன்று 574 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கோவையில் மொத்த கரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 32,068ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வந்த 697 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 26,605ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 436ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று, தமிழ்நாட்டில் புதிதாக ஐந்தாயிரத்து 659 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 97 ஆயிரத்து 602ஆக உயர்ந்துள்ளது.
மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் சிகிச்சைப் பலனின்றி இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 520ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,659 பேருக்கு கரோனா தொற்று உறுதி!