ETV Bharat / state

மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

வாட்டர் வாஷ் செய்து கொண்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி துடிதுடிக்க உயிரிழந்த இளைஞரின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

author img

By

Published : Jan 4, 2023, 7:09 PM IST

Etv Bharat
Etv Bharat
மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

சென்னை: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் ஆறாவது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர், சுமதி (42). இவரது கணவர் பாஸ்கர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சுமதிக்கு ஆகாஷ் (20) என்ற மகனும், 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஆகாஷ் மெக்கானிக் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 15 நாட்களாக கொடுங்கையூர் விவேகானந்தா நகர் காளமேகம் தெருவில் உள்ள யுவராஜ் வாட்டர் வாஷ் கடையில் பணியாற்றி வந்தார்.

நேற்று (ஜன.03) காலை 11 மணியளவில் ஆகாஷ் இருசக்கர வாகனத்தை வாட்டர் வாஷ் செய்வதற்காக மின்மோட்டார் ஸ்விட்சை ஆன் செய்தார். அப்போது எலக்ட்ரிக் ஷாக் அடித்து நின்ற இடத்திலேயே மயக்கமடைந்தார். உடனடியாக, கடையின் உரிமையாளர் யுவராஜ் என்பவர் ஆகாஷை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது, பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனை சென்ற கொடுங்கையூர் காவல் துறையினர், உயிரிழந்த ஆகாஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து வாட்டர் வாஷ் கடையின் உரிமையாளர் யுவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி ஆகாஷ் உயிரிழந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: பள்ளி பராமரிப்பு பணியில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..

மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

சென்னை: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் ஆறாவது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர், சுமதி (42). இவரது கணவர் பாஸ்கர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். சுமதிக்கு ஆகாஷ் (20) என்ற மகனும், 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஆகாஷ் மெக்கானிக் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 15 நாட்களாக கொடுங்கையூர் விவேகானந்தா நகர் காளமேகம் தெருவில் உள்ள யுவராஜ் வாட்டர் வாஷ் கடையில் பணியாற்றி வந்தார்.

நேற்று (ஜன.03) காலை 11 மணியளவில் ஆகாஷ் இருசக்கர வாகனத்தை வாட்டர் வாஷ் செய்வதற்காக மின்மோட்டார் ஸ்விட்சை ஆன் செய்தார். அப்போது எலக்ட்ரிக் ஷாக் அடித்து நின்ற இடத்திலேயே மயக்கமடைந்தார். உடனடியாக, கடையின் உரிமையாளர் யுவராஜ் என்பவர் ஆகாஷை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது, பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனை சென்ற கொடுங்கையூர் காவல் துறையினர், உயிரிழந்த ஆகாஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து வாட்டர் வாஷ் கடையின் உரிமையாளர் யுவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி ஆகாஷ் உயிரிழந்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: பள்ளி பராமரிப்பு பணியில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் உயிரிழப்பு.. பெற்றோர் குற்றச்சாட்டு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.