ETV Bharat / state

இளம்பெண் தற்கொலை: திருமணம் செய்ய வற்புறுத்திய ராணுவ வீரர் கைது!

author img

By

Published : Dec 7, 2020, 4:00 PM IST

சென்னை: இளம்பெண் தற்கொலையால் உயிரிழந்த வழக்கில், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய குற்றத்தின் பேரில் ராணுவத்தில் பணிபுரியும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

ராணுவ வீரர்
ராணுவ வீரர்

சென்னை, பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பெயின்டர் கிருஷ்ணனின் மகள் பாரதி (24). இவரும் தனியார் டிரவல்ஸ் நிறுவன ஊழியர் மோகனும் காதலித்தனர். இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில் மோகனின் பெற்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

பெற்றோரின் விருப்பத்திற்காக மோகன் தனது காதலை முறித்து கொண்டார். இந்தச் சமயத்தில் ‘ஹலோ ஆப்’ மூலம் பாரதிக்கு விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த முத்துக்குமரேசன் (32) என்பவர் அறிமுகமானார்.

நாக்பூரில் ராணுவ ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரியும் இவர், கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி சென்னை வந்திருக்கிறார். தாம்பரத்தில் பாரதியும் இவரைச் சந்தித்திருக்கிறார். இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

எல்லாம் சுமுகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில் முத்துக்குமரேசனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது சில நாள்களுக்கு முன் பாரதிக்கு தெரியவந்தது. இது தொடர்பாக குமரேசனிடம் பாரதி கேட்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தனக்கு திருமணமான நிலையிலும், குமரேசன் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி, பாரதியை வற்புறுத்தியுள்ளார். இதற்கு பாரதி மறுப்பு தெரிவித்ததால் பாரதியின் குடும்பத்தாரிடம் செல்போனில் பேசி திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

இந்நிலையில், டிசம்பர் 2ஆம் தேதி முத்துகுமரேசன் பாரதியை வீடியோ கால் மூலம் அழைத்து திருமணம் தொடர்பாக பேசியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

இறுதியில் பாரதி தன்னை தொடர்ந்து வற்புறுத்தினால், கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். அதற்கு, முத்துக்குமரேசன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொள் என நக்கலாக கூறியதால் மனமுடைந்த பாரதி, வீடியோ அழைப்பைத் துண்டிக்காமல் குமரேசன் முன்னிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பாரதியின் செல்போனில் பதிவான வீடியோவை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முத்துக்குமரேசன் பாரதியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

சென்னை, பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பெயின்டர் கிருஷ்ணனின் மகள் பாரதி (24). இவரும் தனியார் டிரவல்ஸ் நிறுவன ஊழியர் மோகனும் காதலித்தனர். இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில் மோகனின் பெற்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

பெற்றோரின் விருப்பத்திற்காக மோகன் தனது காதலை முறித்து கொண்டார். இந்தச் சமயத்தில் ‘ஹலோ ஆப்’ மூலம் பாரதிக்கு விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த முத்துக்குமரேசன் (32) என்பவர் அறிமுகமானார்.

நாக்பூரில் ராணுவ ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரியும் இவர், கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி சென்னை வந்திருக்கிறார். தாம்பரத்தில் பாரதியும் இவரைச் சந்தித்திருக்கிறார். இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

எல்லாம் சுமுகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில் முத்துக்குமரேசனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது சில நாள்களுக்கு முன் பாரதிக்கு தெரியவந்தது. இது தொடர்பாக குமரேசனிடம் பாரதி கேட்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தனக்கு திருமணமான நிலையிலும், குமரேசன் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி, பாரதியை வற்புறுத்தியுள்ளார். இதற்கு பாரதி மறுப்பு தெரிவித்ததால் பாரதியின் குடும்பத்தாரிடம் செல்போனில் பேசி திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.

இந்நிலையில், டிசம்பர் 2ஆம் தேதி முத்துகுமரேசன் பாரதியை வீடியோ கால் மூலம் அழைத்து திருமணம் தொடர்பாக பேசியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.

இறுதியில் பாரதி தன்னை தொடர்ந்து வற்புறுத்தினால், கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். அதற்கு, முத்துக்குமரேசன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொள் என நக்கலாக கூறியதால் மனமுடைந்த பாரதி, வீடியோ அழைப்பைத் துண்டிக்காமல் குமரேசன் முன்னிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பாரதியின் செல்போனில் பதிவான வீடியோவை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முத்துக்குமரேசன் பாரதியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.