ETV Bharat / state

அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் முகமூடி அணிந்த நபர்களால் பெண் வெட்டிக் கொலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 4:48 PM IST

அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் பெண் ஒருவர் முகமூடி அணிந்த மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்

அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் முகமூடி அணிந்த நபர்களால் பெண் வெட்டிக் கொலை
அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் முகமூடி அணிந்த நபர்களால் பெண் வெட்டிக் கொலை

சென்னை: வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நந்தினி (27) என்பவர் தனது தம்பி மதன் தற்கொலை குறித்து துக்கம் விசாரிக்க அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஐசிஎப் காலணிக்கு வந்துள்ளார். அப்போது நந்தினி வீட்டின் அருகில் சென்ற முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நந்தினியை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், போலீசார் இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், ஏற்கனவே அதே பகுதியில் போண்டா பாலாஜி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் என்பவரின் மனைவி நந்தினி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளிகளை அம்பத்தூர் தொழில்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர் மேலும் இரு தினங்களுக்கு முன்பு அம்பத்தூர் ரயில் நிலைய பகுதியில் பீர் பாட்டிலால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அம்பத்தூர் தொழில்பேட்டை பகுதியில் பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காவல்துறை எனக்கூறி ரூ.20 லட்சம் பறித்த கும்பல்: அதிரடியாக வளைத்து பிடித்த தமிழக காவல்துறை..

சென்னை: வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நந்தினி (27) என்பவர் தனது தம்பி மதன் தற்கொலை குறித்து துக்கம் விசாரிக்க அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட ஐசிஎப் காலணிக்கு வந்துள்ளார். அப்போது நந்தினி வீட்டின் அருகில் சென்ற முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நந்தினியை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், போலீசார் இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், ஏற்கனவே அதே பகுதியில் போண்டா பாலாஜி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் என்பவரின் மனைவி நந்தினி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளிகளை அம்பத்தூர் தொழில்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர் மேலும் இரு தினங்களுக்கு முன்பு அம்பத்தூர் ரயில் நிலைய பகுதியில் பீர் பாட்டிலால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அம்பத்தூர் தொழில்பேட்டை பகுதியில் பெண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காவல்துறை எனக்கூறி ரூ.20 லட்சம் பறித்த கும்பல்: அதிரடியாக வளைத்து பிடித்த தமிழக காவல்துறை..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.