ETV Bharat / state

ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு - govt school teachers union

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் உயர்த்தபட்ட மூன்று விழுக்காடு அகவிலைப்படி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு ஊழியர் சங்கம்
author img

By

Published : May 11, 2019, 8:34 AM IST

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் வணிகவரித் துறை அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அன்பரசு ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் உயர்த்தப்பட்ட மூன்று விழுக்காடு அகவிலைப்படியை தற்போது வரை வழங்கவில்லை.

அரசு ஊழியர் சங்கம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 12 விழுக்காடு அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. தற்பொது நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதியே அரசாணை வெளியிட்டது.

தமிழ்நாட்டில் 21 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். எங்களின் உரிமைக்காக 2017ஆம் ஆண்டு முதல் நடத்திய போராட்டத்தை அரசு அவர்களுக்கு எதிராக பார்க்கிறது.

எனவே வரக்கூடிய 19ஆம் தேதிக்கு முன்னதாக மூன்று விழுக்காடு அகவிலைப்படி வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் வரும் 23ஆம் தேதிக்குப் பின்னர் தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் அடுத்தக்கட்ட போராட்டம் நடக்கும்" என்றார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் வணிகவரித் துறை அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அன்பரசு ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் உயர்த்தப்பட்ட மூன்று விழுக்காடு அகவிலைப்படியை தற்போது வரை வழங்கவில்லை.

அரசு ஊழியர் சங்கம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 12 விழுக்காடு அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. தற்பொது நடைபெறும் மக்களவைத் தேர்தலையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதியே அரசாணை வெளியிட்டது.

தமிழ்நாட்டில் 21 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். எங்களின் உரிமைக்காக 2017ஆம் ஆண்டு முதல் நடத்திய போராட்டத்தை அரசு அவர்களுக்கு எதிராக பார்க்கிறது.

எனவே வரக்கூடிய 19ஆம் தேதிக்கு முன்னதாக மூன்று விழுக்காடு அகவிலைப்படி வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் வரும் 23ஆம் தேதிக்குப் பின்னர் தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் அடுத்தக்கட்ட போராட்டம் நடக்கும்" என்றார்.

Intro:ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை வீட்டில் வைத்து இல்லை
தேர்தல் ஆணையம் மீது அரசு ஊழியர்கள் காய்ச்சல்


Body:சென்னை,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் உயர்த்தபட்ட 3 சதவீதம் அகவிலைப்படி வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் வணிகவரி துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அன்பரசு தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் உயர்த்தப்பட்ட 3 சதவீத அகவிலைப்படியை தற்போது வரை வழங்கவில்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 12 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியே அரசாணை வெளியிட்டனர்.
தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு முன்பாக தமிழகத்தில் உள்ள 21 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். எங்களின் உரிமைக்காக 2017 ஆம் ஆண்டு முதல் நடத்திய போராட்டத்தை அரசுக்கு எதிராக பார்க்கிறது. எனவே வரக்கூடிய 19ம் தேதிக்கு முன்னதாக வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் வரும் 23ம் தேதிக்குப் பின்னர் தமிழகம் முழுவதும் அழுத்தப்பட்ட போராட்டத்தினை அறிவிப்போம்.

17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் மட்டுமில்லாமல் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் ஏற்படுத்தினோம். தேர்தல் முடிந்த பின்னர் தமிழக தேர்தல் அதிகாரி காவல்துறையினர் 100 சதவீதம் வாக்களித்து விட்டனர் என அறிவித்துள்ளார். ஆனால் தேர்தலை நடத்திய ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கவில்லை. தேர்தல் பணியில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்கள் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டதாக கூறுகிறார். அவர்களில் ஒரு லட்சம் பேர் வாக்களித்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் வாக்குச்சீட்டு தங்கள் வீட்டில் எவ்வாறு வைத்துள்ளார்கள் என்பதை எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் ஆசிரியர்கள் இடம் கேட்கும் பொழுது எங்களுக்கு வாக்குச்சீட்டு வரவில்லை என கூறுகின்றனர். ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தங்களுக்கு வந்த வாகைத்திணை யாரும் வீட்டில் வைத்து இல்லை என கூறினார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.