ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்களார் பட்டியல் நாளை வெளியீடு

சென்னை: மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

author img

By

Published : Oct 3, 2019, 1:04 PM IST

மாநில தேர்தல் ஆணைய

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறமால் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதின்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களாக செய்துவருகிறது. அதன்படி முதற்கட்டமாக மாநிலத் தேர்தல் அலுவலர், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொள்ள பிடிஓ-வினர் வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர். மேலும் வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிமுறைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை 4ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நாளை உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியல் 5ஆம் தேதி அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறமால் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதின்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களாக செய்துவருகிறது. அதன்படி முதற்கட்டமாக மாநிலத் தேர்தல் அலுவலர், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொள்ள பிடிஓ-வினர் வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர். மேலும் வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிமுறைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழ்நாடு முழுவதும் 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை 4ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நாளை உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியல் 5ஆம் தேதி அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறமால் உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இதுவரை ஆறு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதின்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களாக செய்துவருகிறது. அதன்படி முதற்கட்டமாக மாநில தேர்தல் அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொள்ள பி டி ஓ வினர் வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர். மேலும் வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை 4ம் தேதி வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நாளை உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியல் 5ம் தேதி அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும். மேலும் இது தொடர்பான அறிக்கையை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தேர்தல் ஆணையத்துக்கு 5 தேதி அனுப்பி வைப்பர். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக 1.45 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாநில தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தது. அதன்படி அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. சென்னைக்கு தேவையான 43 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு பொறியாளர்கள் அதைப் பரிசோதி கின்றனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.