ETV Bharat / state

சசிகலாவின் பினாமி வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: சசிகலாவின் பினாமி எனக் கூறி, தனது சொத்துகளை முடக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நிதி நிறுவன உரிமையாளர் தாக்கல் செய்த மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Jun 25, 2020, 5:22 PM IST

Vk Sasikala’s binami Dhinakaran challenging income tax notification, HC issued notice to income tax
Vk Sasikala’s binami Dhinakaran challenging income tax notification, HC issued notice to income tax

சசிகலாவின் பினாமி எனக்கூறி, தன்னுடைய சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்வதாக நிதி நிறுவன உரிமையாளர் வி.எஸ்.ஜே. தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'சென்னை பெரம்பூரில் கங்கா ஃபவுண்டேஷன்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் மால் கட்டடத்தின் ஒரு கடையையும், 11 ஆயிரத்து 135 சதுர அடி நிலத்தையும்தான் வாங்கினேன்.

கடந்த 2017ஆம் ஆண்டு வி.கே. சசிகலா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக எனது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள சொத்துகளை 18 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை பெற்றிருந்ததாகவும் வருமான வரித்துறை தரப்பில் குற்றம் சாட்டினர். .

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தன்னை வி.கே. சசிகலாவின் பினாமி எனக் கூறி, ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள தனக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளரிடம் இருந்து வாங்கிய தனது சொத்தை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெற்றுள்ளதாகவும், சசிகலாவின் பரிவர்த்தனைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது. எனவே, வருமான வரித்துறையினரின் இந்த உத்தரவினை ரத்து செய்ய வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இரண்டு வாரங்களில் அனைத்து ஆவணங்களுடன் இந்த மனு தொடர்பாக விரிவாகப் பதிலளிக்கும்படி வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

சசிகலாவின் பினாமி எனக்கூறி, தன்னுடைய சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்வதாக நிதி நிறுவன உரிமையாளர் வி.எஸ்.ஜே. தினகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'சென்னை பெரம்பூரில் கங்கா ஃபவுண்டேஷன்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் மால் கட்டடத்தின் ஒரு கடையையும், 11 ஆயிரத்து 135 சதுர அடி நிலத்தையும்தான் வாங்கினேன்.

கடந்த 2017ஆம் ஆண்டு வி.கே. சசிகலா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக எனது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள சொத்துகளை 18 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை பெற்றிருந்ததாகவும் வருமான வரித்துறை தரப்பில் குற்றம் சாட்டினர். .

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தன்னை வி.கே. சசிகலாவின் பினாமி எனக் கூறி, ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள தனக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளரிடம் இருந்து வாங்கிய தனது சொத்தை அடமானமாக வைத்து வங்கியில் கடன் பெற்றுள்ளதாகவும், சசிகலாவின் பரிவர்த்தனைகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது. எனவே, வருமான வரித்துறையினரின் இந்த உத்தரவினை ரத்து செய்ய வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இரண்டு வாரங்களில் அனைத்து ஆவணங்களுடன் இந்த மனு தொடர்பாக விரிவாகப் பதிலளிக்கும்படி வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.