ETV Bharat / state

'அதிகமாக பேசுகிறார்கள் என்பதாலேயே, ஒரு மொழி உயர்ந்து விடாது' - கவிஞர் வைரமுத்து!

author img

By

Published : Oct 14, 2019, 12:16 PM IST

சென்னை : தமிழாற்றுப்படை 10ஆம் பதிப்பு அறிமுக விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழுக்கு பெரிய மரியாதை இல்லை என்று கூறியுள்ளார்.

Vairamuthu book release

கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை 10ஆம் பதிப்பு அறிமுக விழா சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நூலினை சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் திருவாசகம் வெளியிட பாடகி சுசீலா பெற்றுக்கொண்டார்.

Vairamuthu book release
வைரமுத்துவின் தமிழாற்றுப்படை

விழாவில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, 'உலக மொழியில் தமிழ் 18ஆவது இடத்தில் இருப்பதனாலேயே தாழ்ந்து விடாது. அதிகமாக பேசுகிறார்கள் என்பதாலேயே ஒரு மொழி உயர்ந்து விடாது.

மத்திய அரசு செயல் வடிவில் தமிழை வளர்க்க வேண்டும். தமிழும் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும். வேலைவாய்ப்புத் தேர்வுகளில் தமிழ் தவிர்க்கப்படக் கூடாது.

Vairamuthu book release
தமிழாற்றுப்படை 10ஆம் பதிப்பு அறிமுக விழாவில் குடும்பத்தினருடன் கவிஞர் வைரமுத்து

சமஸ்கிருதத்துக்கும், ஹிந்திக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்திய அரசு தமிழுக்கும் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழுக்குப் பெரிய மரியாதை இல்லை. தமிழ்ப் பேச தெரியாதவர்களை, தமிழ் பேச வைக்க நாம் தமிழில் பெயர் வைக்கவேண்டும். பூமியை விட்டு வேறு கிரகத்திற்குச் சென்றாலும், அது முதலில் தமிழினமாக இருக்க வேண்டும்' என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

இதையும் படிங்க:

'வரும் 17ஆம் தேதி வடகிழக்குப் பருவமழைத் தொடங்க வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்!

கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை 10ஆம் பதிப்பு அறிமுக விழா சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நூலினை சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் திருவாசகம் வெளியிட பாடகி சுசீலா பெற்றுக்கொண்டார்.

Vairamuthu book release
வைரமுத்துவின் தமிழாற்றுப்படை

விழாவில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து, 'உலக மொழியில் தமிழ் 18ஆவது இடத்தில் இருப்பதனாலேயே தாழ்ந்து விடாது. அதிகமாக பேசுகிறார்கள் என்பதாலேயே ஒரு மொழி உயர்ந்து விடாது.

மத்திய அரசு செயல் வடிவில் தமிழை வளர்க்க வேண்டும். தமிழும் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட வேண்டும். நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும். வேலைவாய்ப்புத் தேர்வுகளில் தமிழ் தவிர்க்கப்படக் கூடாது.

Vairamuthu book release
தமிழாற்றுப்படை 10ஆம் பதிப்பு அறிமுக விழாவில் குடும்பத்தினருடன் கவிஞர் வைரமுத்து

சமஸ்கிருதத்துக்கும், ஹிந்திக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்திய அரசு தமிழுக்கும் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழுக்குப் பெரிய மரியாதை இல்லை. தமிழ்ப் பேச தெரியாதவர்களை, தமிழ் பேச வைக்க நாம் தமிழில் பெயர் வைக்கவேண்டும். பூமியை விட்டு வேறு கிரகத்திற்குச் சென்றாலும், அது முதலில் தமிழினமாக இருக்க வேண்டும்' என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

இதையும் படிங்க:

'வரும் 17ஆம் தேதி வடகிழக்குப் பருவமழைத் தொடங்க வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்!

Intro:தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழுக்கு பெரிய மரியாதை இல்லை கவிஞர் வைரமுத்துBody:கவிஞர் வைரமுத்து வின் தமிழாற்றுப்படை 10 ஆம் பதிப்பு அறிமுக விழாவில் சென்னையில் உள்ள ஹோட்டல் சவேரா வில் நடைபெற்றது இந்நூலினை சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் திருவாசகம் வெளியிட பாடகி சுசீலா இதனை பெற்றுக்கொண்டார்.. விழாவில் பேசிய பாடலாசிரியர் வைரமுத்து.

தமிழர்கள் எப்போது ஒன்று படுவார்கள் என்றால் தமிழுக்கு தீங்கு வரும்போது தமிழர்கள் ஒன்றுபடுவார்கள். தமிழர்களை நான் நேசிக்க காரணம் நான் நிற்பதே தமிழர்களின் தோள்களில் ஏறி தான். தமிழர்கள் இல்லையேல் நான் இல்லை.எது நல்லது எது கேட்டது என்ற காலம் சென்று எது உயர்ந்தது எது உகந்தது என்று அடையாளம் காண தொடங்கி விட்டார்கள் தமிழர்கள்.

உலக மொழியில் தமிழ் 18 வது இடத்தில் இருப்பதனாலே தாழ்ந்து விடாது.
அதிகமாக பேசுகிறார்கள் என்பதாலே ஒரு மொழி உயர்ந்துவிடாது. தமிழில் தொன்மை, உண்மை, வரலாறு,பண்பாடு என்பதை அறிந்ததானால் பிரதமர் ஐநாவில் 24 மொழிகளை விட தமிழ் சிறந்தது என்பதனால் தமிழை மேற்கோள் காட்டினார். பிரதமர் தமிழ் உச்சரித்தத்தில் செவி குளிர்ந்தது ஆனால் இதயத்தை குளிர்விக்க இன்னும் ஏராளம் செய்ய வேண்டும்.
மத்திய அரசு செயல் வடிவில் தமிழை வளர்க்க வேண்டும். தமிழும் ஆட்சி மொழியாக அறிவிக்க பட வேண்டும். நீதிமனற்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்.
தமிழ் பயின்றவர்கள் தமிழை பயன்றவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும்.வேலைவாய்ப்பு தேர்வுகளில் தமிழ் தவிர்க்கப்பட கூடாது.
சமஸ்கிருதம் ஹிந்திக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்திய அரசு தமிழுக்கும் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழுக்கு பெரிய மரியாதை இல்லை.
தமிழ் பேச தெரியாதவர்களை தமிழ் பேச வைக்க நாம் தமிழில் பெயர் வைக்கவேண்டும்.
பூமியை விட்டு வேறு கிரகத்திற்கு சென்றாலும் அது முதலில் தமிழினமாக இருக்க வேண்டும்.

தமிழை கேட்பது மட்டும் சொர்க்கம் அல்ல நல்ல (சுசீலா) குரலில் கேட்பதுதான் சொர்க்கம்.
தமிழ் தாயின் செல்ல பிள்ளையாக இருந்ததால்தான் இவ்வளவு அழகாக(சுசீலா) தமிழ் உச்சரிக்க முடிந்தது என்று பி சுசிலா விற்கு பாராட்டு தெரிவித்தார்.

பின்னணி பாடகி பி சுசிலா பேசுகையில்

எங்கேயோ இருந்த என்னை தமிழ்நாடு பேரும் புகழும் கொடுத்து என்னை நிரந்தரமாக இங்கே வைத்துவிட்டனர். தமிழும் மூன்று எழுத்து என் பெயரும் மூன்றெழுத்து எப்படியோ ஒன்றாக அமைந்து விட்டது.நான் ஆந்திரா செல்லவில்லை என்றும் தமிழ்நாட்டை நம்பி நான்.


.Conclusion:இந்த விழாவில் கராத்தே தியாகராஜன் கவிஞர் முத்துலிங்கம் தொழிலதிபர் வெங்கடேஷ்,வெற்றித்
தமிழர் பேரவை வி.பி.குமார் கவிஞர் மதன் கார்க்கி,கவிஞர் கபிலன் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.