சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா (30). இவர் தனது சகோதரர் கபில் (27) என்பவருடன் நேற்று ஊபர் ஆட்டோவில் தேனாம்பேட்டைக்குச் சென்றுள்ளார். அப்போது புரசைவாக்கம் ELM பள்ளி அருகே சில்லறை பிரச்னை தொடர்பாக அவர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இதுவரை பயணம் செய்த தொகையான 70 ரூபாயைக் கொடுத்துவிட்டு இருவரையும் இறங்குமாறு ஆட்டோ ஓட்டுநர் ஜோதி (31) என்பவர் கூறியுள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே ஆட்டோ ஓட்டுநரான ஜோதிக்கும், கபிலுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இந்த கைகலப்பில் ஆட்டோ ஓட்டுநர் மோனிஷாவையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மோனிஷா, அவரது சகோதரர் கபில் ஆகிய இருவரும் வேப்பேரி காவல் நிலையத்தில் ஊபர் ஆட்டோ ஓட்டுநர் மீது புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ஆட்டோ ஓட்டுநரான ஜோதியை கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஆட்டுக்கறி வழங்காததால் கணவர் ஆத்திரம் - மனைவி எரித்துக் கொலை