ETV Bharat / state

சென்னையில் பைக் திருடன் கைது! 15 வாகனங்கள் மீட்பு

author img

By

Published : Apr 26, 2019, 10:36 AM IST

சென்னை: கொண்டிதோப்பு பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடி வந்தவரை ஏழுகிணறு காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து பதினைந்து இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.

two-wheeler-thief

சென்னை ஏழுகிணறு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொண்டித்தோப்பு பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடுபோவதாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இந்த புகார் அடிப்படையில் ஏழுகிணறு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தவமணி தலைமையில் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சாலிகிராமம் தசரத புரத்தைச் சேர்ந்த நசீர் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த விசாரணையில் நசீர் பல வருடங்களாக இருசக்கர வாகனத்தை திருடிவந்தது தெரியவந்தது.

அதன் பிறகு அவர் யார் யாரிடம் இருசக்கர வாகனத்தை விற்றுள்ளார் என்பதை காவல் துறையினரிடம் வாக்குமூலமாக அளித்தார். அதனைத் தொடர்ந்து மொத்தம் பதினைந்து இரு சக்கர வாகனங்களை மீட்டனர். பின்னர், நசீர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கொண்டிதோப்பு
சென்னையில் பைக் திருடர் கைது

சென்னை ஏழுகிணறு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொண்டித்தோப்பு பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடுபோவதாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இந்த புகார் அடிப்படையில் ஏழுகிணறு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தவமணி தலைமையில் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சாலிகிராமம் தசரத புரத்தைச் சேர்ந்த நசீர் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த விசாரணையில் நசீர் பல வருடங்களாக இருசக்கர வாகனத்தை திருடிவந்தது தெரியவந்தது.

அதன் பிறகு அவர் யார் யாரிடம் இருசக்கர வாகனத்தை விற்றுள்ளார் என்பதை காவல் துறையினரிடம் வாக்குமூலமாக அளித்தார். அதனைத் தொடர்ந்து மொத்தம் பதினைந்து இரு சக்கர வாகனங்களை மீட்டனர். பின்னர், நசீர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கொண்டிதோப்பு
சென்னையில் பைக் திருடர் கைது
15 இருசக்கர வாகனம் மீட்பு

சென்னை ஏழுகிணறு காவல் நிலையத்திற்குட்ப்பட்ட இடத்தில் 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

சென்னை சாலிக்கிராமம் தசரதபுரத்தை சேர்ந்தவன் நசீர். இவன் பல வருடங்களாக இருசக்கர வாகனத்தை திருடி விற்பது தொழிலாக கொண்டுள்ளான்.

அதனை தொடர்ந்து சென்னை ஏழுகிணறு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொண்டித்தோப்பு பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடுபோவது குறித்து புகார்கள் குவிந்தன. இந்த புகார் அடிப்படையில் ஏழுகிணறு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி தவமணி தலைமையில் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் தசரத புரத்தை சேர்ந்த நசீர் என்பவனை கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் இருசக்கர வாகனம் திருடுவது இவன் மட்டும்தானா அல்லது இவனை சார்ந்த கூட்டாளிகள் யாரேனும் உள்ளனரா என போலீசார் துருவித்துறுவி விசாரித்தனர். அதன் பிறகு நசீர் யார் யாரிடம் இருசக்கர வாகனத்தை விற்றுள்ளான் என்பதை போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்தான். அதனை தொடர்ந்து அவர்களிடம் சென்று மொத்தம் 15  இரு சக்கர வாகனங்களை மீட்டனர். விசாரணை முடிந்த பிறகு நசீர் புழல் சிறையில் அடைக்கப்பட்டான்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.