ETV Bharat / state

அடுத்தடுத்து உயிரிழப்பு - பொதுமக்கள் அச்சம்!

author img

By

Published : May 22, 2020, 2:10 PM IST

சென்னை: சங்கர் நகர் பகுதியில் அடையாளம் தெரியாத இரு நபர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

two-unidentified-peoples-die-public-are-panic
two-unidentified-peoples-die-public-are-panic

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை வடக்கு மாட வீதி தெருவில் உள்ள முட்புதரில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க எரிந்த நிலையில் ஆண் உடல் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனே இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, எரிக்கப்பட்ட நபர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? அவரை யாராவது கொலை செய்து எரித்தார்கள? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சங்கர் நகர் அனகாபுத்தூர் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவலளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூதாட்டியை சோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல் துறையினர் இறந்தவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? என்ற கோணங்களில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:தகராறை விலக்கிவிட சென்ற வியாபாரிக்கு அரிவாள் வெட்டு - ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது!

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை வடக்கு மாட வீதி தெருவில் உள்ள முட்புதரில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க எரிந்த நிலையில் ஆண் உடல் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனே இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, எரிக்கப்பட்ட நபர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? அவரை யாராவது கொலை செய்து எரித்தார்கள? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சங்கர் நகர் அனகாபுத்தூர் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்புலன்ஸிற்கு தகவலளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூதாட்டியை சோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல் துறையினர் இறந்தவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? என்ற கோணங்களில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க:தகராறை விலக்கிவிட சென்ற வியாபாரிக்கு அரிவாள் வெட்டு - ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.