ETV Bharat / state

"விவசாயிகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை" - அமைச்சர் செந்தில் பாலாஜி!

author img

By

Published : Mar 9, 2023, 6:49 PM IST

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது என்றும், தற்போது 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

hours
hours

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் இன்று(மார்ச்.9) மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இரண்டு கோடியே 60 லட்சம் பேர் இணைத்துள்ளதாகவும், 67 ஆயிரம் பேர் மின் இணைப்பு எண்னுடன் ஆதாரை இணைக்கவில்லை எனவும், அவர்கள் வீடுதோறும் சென்று இணைக்க பணிகள் நடைபெற்ற வருவதாகவும் தெரிவித்தார்.

ஒரே ஆதார் எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை என்றும், சில பகுதிகளில் அதிகாரிகள் இதனை தவறாக புரிந்து கொண்டு தன்னிச்சையாக செயல்படுவதாகவும், மின்சார வாரியம் சார்பாக எவ்வித சுற்றறிக்கையும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆதார் எண்ணுடன் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருந்த நபர் மீது நடவடிக்கை எடுத்த மின்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், தற்போது 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முதல் நாள், விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கியதாக தெரிவித்தார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருப்பது ஆடு நனைகிறது என ஓநாய் அழுவது போல் உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவதற்கான கட்டமைப்பு பணிகளை ஏற்படுத்தி வருவதாகவும், அடுத்த ஆண்டு கோடை காலம் முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் - மின் உற்பத்திக்கு தேவையான 11 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தற்போது கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் தலா 1,565 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக பெற டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

டெண்டர் விடுவதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரத்தை எட்டு ரூபாய்க்கு பெற முடியும் எனவும், இவ்வாறு பெறாமல் எக்ஸ்சேஞ்ச் மூலம் மின்சாரம் பெற்றால் 12 முதல் 20 ரூபாய் வரை ஒரு யூனிட்டுக்கு மின்சாரம் செலவு ஏற்படும் எனவும், டெண்டர் விடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு 2030-க்குள் மின் உற்பத்தியை இரண்டு மடங்காக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என்றும், மின்வாரிய ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது- இரு வாரங்களில் முடிவு பெறும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வார்னிங்!

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் இன்று(மார்ச்.9) மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இரண்டு கோடியே 60 லட்சம் பேர் இணைத்துள்ளதாகவும், 67 ஆயிரம் பேர் மின் இணைப்பு எண்னுடன் ஆதாரை இணைக்கவில்லை எனவும், அவர்கள் வீடுதோறும் சென்று இணைக்க பணிகள் நடைபெற்ற வருவதாகவும் தெரிவித்தார்.

ஒரே ஆதார் எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை என்றும், சில பகுதிகளில் அதிகாரிகள் இதனை தவறாக புரிந்து கொண்டு தன்னிச்சையாக செயல்படுவதாகவும், மின்சார வாரியம் சார்பாக எவ்வித சுற்றறிக்கையும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் ஆதார் எண்ணுடன் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருந்த நபர் மீது நடவடிக்கை எடுத்த மின்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், தற்போது 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முதல் நாள், விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, 12 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கியதாக தெரிவித்தார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருப்பது ஆடு நனைகிறது என ஓநாய் அழுவது போல் உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவதற்கான கட்டமைப்பு பணிகளை ஏற்படுத்தி வருவதாகவும், அடுத்த ஆண்டு கோடை காலம் முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் - மின் உற்பத்திக்கு தேவையான 11 நாட்களுக்கான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தற்போது கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் தலா 1,565 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக பெற டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

டெண்டர் விடுவதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரத்தை எட்டு ரூபாய்க்கு பெற முடியும் எனவும், இவ்வாறு பெறாமல் எக்ஸ்சேஞ்ச் மூலம் மின்சாரம் பெற்றால் 12 முதல் 20 ரூபாய் வரை ஒரு யூனிட்டுக்கு மின்சாரம் செலவு ஏற்படும் எனவும், டெண்டர் விடுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு 2030-க்குள் மின் உற்பத்தியை இரண்டு மடங்காக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என்றும், மின்வாரிய ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது- இரு வாரங்களில் முடிவு பெறும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இதையும் படிங்க: அண்ணாமலைக்கு நாவடக்கம் வேண்டும்- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வார்னிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.