ETV Bharat / state

நண்பரின் மனைவி வீட்டாரை தாக்கியவர் கைது! - நண்பரின் மனைவி வீட்டாரை தாக்கிய தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் கைது

சென்னை: நண்பரின் குடும்பத் தகராறில் தலையிட்டு, அவரது மனைவி வீட்டாரை தாக்கியதாக தனியார் தொலைக்காட்சி முன்னாள் ஒளிப்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் கவுதம்
author img

By

Published : Nov 15, 2019, 2:34 PM IST

Updated : Nov 15, 2019, 4:03 PM IST

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மைத்துனர் ராஜசேகருடன் ஒன்றாக வசித்துவருகிறார். மேலும், ராஜசேகரின் தாய் லதா (47) தன் இரண்டாவது கணவர் முகேஷ் என்பவருடன் ரெட்டேரி பகுதியில் வசித்துவந்துள்ளார்.

கடந்த 5ஆம் தேதி முகேஷ், லதாவை அடித்ததால் கோபித்துகொண்டு அவரது மகன் ராஜசேகர் வீட்டிற்கு வந்து மூன்று நாள்கள் தங்கியுள்ளார். பின்னர், வில்லிவாக்கத்தில் உள்ள அவரது தோழி வீட்டிற்கு லதா சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு முகேஷ் தனது நண்பர் கவுதம், சிலருடன் ராஜசேகர் வீட்டிற்கு தன் மனைவி லதாவை அழைக்கச் சென்றுள்ளார். அப்போது, லதா அங்கில்லாததால் வீட்டிலிருந்த மணிகண்டனை காரில் ஏற்றிக்கொண்டு லதா தங்கியுள்ள இடத்தை காட்டச்சொல்லி தாக்கியுள்ளனர்.

தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் கவுதம்
தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் கவுதம்

அவர்கள் சென்ற காரை மறித்த இரவு நேர ரோந்துப் பணியிலிருந்த உதவி ஆய்வாளர், உள்ளே இருந்த மணிகண்டன், அவரைத் தாக்கிய கவுதம் ஆகிய இருவரிடமும் விசாரணை செய்தனர். காரில் இருந்த மற்றவர்கள் தப்பியோடியுள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அயனாவரம் காவல் துறையினர் கவுதமிடம் விசாரணை செய்ததில், அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய நபர்கள் குறித்தும் அவரிடம் விசாரித்துவருகிறனர்.

இதையும் படிங்க : சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: 8 பேர் மீது போக்சோ!

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மைத்துனர் ராஜசேகருடன் ஒன்றாக வசித்துவருகிறார். மேலும், ராஜசேகரின் தாய் லதா (47) தன் இரண்டாவது கணவர் முகேஷ் என்பவருடன் ரெட்டேரி பகுதியில் வசித்துவந்துள்ளார்.

கடந்த 5ஆம் தேதி முகேஷ், லதாவை அடித்ததால் கோபித்துகொண்டு அவரது மகன் ராஜசேகர் வீட்டிற்கு வந்து மூன்று நாள்கள் தங்கியுள்ளார். பின்னர், வில்லிவாக்கத்தில் உள்ள அவரது தோழி வீட்டிற்கு லதா சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு முகேஷ் தனது நண்பர் கவுதம், சிலருடன் ராஜசேகர் வீட்டிற்கு தன் மனைவி லதாவை அழைக்கச் சென்றுள்ளார். அப்போது, லதா அங்கில்லாததால் வீட்டிலிருந்த மணிகண்டனை காரில் ஏற்றிக்கொண்டு லதா தங்கியுள்ள இடத்தை காட்டச்சொல்லி தாக்கியுள்ளனர்.

தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் கவுதம்
தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் கவுதம்

அவர்கள் சென்ற காரை மறித்த இரவு நேர ரோந்துப் பணியிலிருந்த உதவி ஆய்வாளர், உள்ளே இருந்த மணிகண்டன், அவரைத் தாக்கிய கவுதம் ஆகிய இருவரிடமும் விசாரணை செய்தனர். காரில் இருந்த மற்றவர்கள் தப்பியோடியுள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த அயனாவரம் காவல் துறையினர் கவுதமிடம் விசாரணை செய்ததில், அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய நபர்கள் குறித்தும் அவரிடம் விசாரித்துவருகிறனர்.

இதையும் படிங்க : சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை: 8 பேர் மீது போக்சோ!

Intro:Body:குடும்ப பிரச்சனையில் வீட்டை விட்டு சென்ற மனைவியை அழைக்க வரும் போது மனைவி இல்லாததால் வீட்டிலுள்ள நபர்களை காரில் ஏற்றி சென்று தாக்கியபோது முன்னாள் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் கைது..மேலும் 4 பேர் தலைமறைவு..


சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(30).இவர் தனது மச்சான் ராஜசேகர் ஆகிய இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். மேலும் ராஜசேகரின் தாய் லதா (47) இரண்டாவது கணவர் முகேஷ் என்பவருடன் ரெட்டேரி பகுதியில் வசித்து வந்துள்ளார்.


இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி முகேஷ் லதாவை அடித்ததால் கோபித்து கொண்டு அவரது மகன் ராஜசேகர் வீட்டிற்கு வந்து 3நாட்கள் தங்கி உள்ளார். பின்னர் தங்கிவிட்டு வில்லிவாக்கத்தில் உள்ள அவரது தோழி வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு முகேஷ் தனது நண்பர்களுடன் ராஜசேகர் என்பவரது வீட்டிற்கு லதாவை அழைக்கவந்துள்ளார்.அப்போது லதா இல்லாததால் வீட்டில் இருந்த மணிகண்டன் என்ற நபரை காரில் ஏற்றி லதா தங்கியுள்ள இடத்தை காட்டவேண்டும் என அவரை தாக்கி உள்ளனர்.இந்த காரானது கான்ஸ்டேபிள் சாலை வழியாக சென்ற போது இரவு ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் காரை மறித்து உள்ளே இருந்த மணிகண்டன் மற்றும் தாக்கிய நண்பர் கவுதம் ஆகிய இருவரையும் அழைத்து விசாரணை செய்யும் போது காரில் இருந்த மற்ற நபர்கள் தப்பி சென்றுள்ளனர்..


இது தொடர்பாக வழக்குபதிவு செய்து கவுதமை அயனாவரம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

மேலும் தலைமறைவாக உள்ள நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.Conclusion:
Last Updated : Nov 15, 2019, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.