ETV Bharat / state

சிறையில் தந்தை-மகன் உயிரிழப்பு: கொலை வழக்குப் பதிவுசெய்ய டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

author img

By

Published : Jun 23, 2020, 4:51 PM IST

சென்னை: சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்யவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

TTV Dhinakaran tweet
TTV Dhinakaran tweet

கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் அடுத்தடுத்த ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. சிறையில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த இருவரின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்திட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பிவருகின்றன.

அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். அதில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த தந்தையும் மகனுமான ஜெயராஜ், பென்னீக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது.

டிடிவி தினகரன் ட்வீட்
டிடிவி தினகரன் ட்வீட்

காவல் துறையினர் தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்திருப்பதாக வணிகர்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதற்குக் காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காவல்துறை சித்ரவதையால் சிறைக்குள்ளேயே தந்தை-மகன் உயிரிழப்பு!

கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் அடுத்தடுத்த ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. சிறையில் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த இருவரின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்திட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பிவருகின்றன.

அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். அதில், “தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த தந்தையும் மகனுமான ஜெயராஜ், பென்னீக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வு கடும் கண்டனத்திற்குரியது.

டிடிவி தினகரன் ட்வீட்
டிடிவி தினகரன் ட்வீட்

காவல் துறையினர் தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்திருப்பதாக வணிகர்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இதற்குக் காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காவல்துறை சித்ரவதையால் சிறைக்குள்ளேயே தந்தை-மகன் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.