ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top ten news @9pm

author img

By

Published : May 18, 2020, 8:59 PM IST

ஈடிவி பாரத் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top ten news @9pm
Top ten news @9pm

தமிழ்நாட்டில் இன்று மேலும் 536 பேருக்கு கரோனா; முழு விவரம்!

சென்னை: தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 760 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், இதுவரை 4,406 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர் எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை: விழுப்புரம் மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் காவல் துறையின் விசாரணை திருப்திகரமாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்ததால் சிபிஐ விசாரணை கேட்டு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் 3 மாதங்களுக்கு EMI ஒத்திவைக்க வாய்ப்பு - ஆய்வில் தகவல்

வங்கிக் கடன் தவணை கட்டுவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்!

மும்பை: இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நாள் முடிவின்படி சென்செக்ஸ் 1,069 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

மெசஞ்சர் ரூம் - சோதனை செய்கிறது வாட்ஸ் அப்... பயனர்கள் குதுகலம்!

ஃபேஸ்புக் நிறுவனம் ஏப்ரல் மாதம் மெசஞ்சர் ரூம்ஸ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது. தற்போது இந்த அம்சத்தை ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் தளத்திலும் அறிமுகம் செய்யவுள்ளது. மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் ஒரே நேரத்தில் 50 பேர் கொண்ட குரூப் வீடியோ கால் அழைப்பை பயன்படுத்த அனுமதிக்கிறது.

8 நாளில் 1300 கி.மீ. சைக்கிள் பயணம்... தந்தையைச் சொந்த ஊர் அழைத்துச் சென்ற சிறுமி!

தர்பங்கா: காயமடைந்த தனது தந்தையை அழைத்துக் கொண்டு ஹரியானாவிலிருந்து பிகார் வரை சைக்கிளில் பயணம் செய்த 13 வயது சிறுமியின் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடைகள் திறக்கலாம் - அரசு அனுமதி

சென்னை: ஊரகப் பகுதிகளில் மட்டும் நாளை முதல் சலூன் கடைகளைத் திறக்க அனுமதி அளித்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தபால் நிலைய தலைமையகத்தில் வைத்தியலிங்கம் எம்.பி., நேரில் ஆய்வு!

புதுச்சேரி: தபால் நிலைய தலைமையகத்தில் மக்களுக்கான சேவைகள் முறையாக கிடைக்கின்றனவா என்பது குறித்து புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் நேரில் ஆய்வு செய்தார்.

நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி-இன் காட்சி தரம் பழைய நிலைக்கு மாற்றப்பட்டது!

ஒடிடி தளங்களில் மிகவும் பிரபலமான நெட்ஃபிளிக்ஸ் கரோனா காலங்களின் தனது தளத்தின் படகாட்சிகளின் தரத்தை குறைத்திருந்தது. தற்போது அதனை பழைய எச்.டி தரத்தில் பயனர்கள் திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தி திமுக இளைஞர் மற்றும் மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் இன்று மேலும் 536 பேருக்கு கரோனா; முழு விவரம்!

சென்னை: தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 760 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், இதுவரை 4,406 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர் எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை: விழுப்புரம் மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் காவல் துறையின் விசாரணை திருப்திகரமாக இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்ததால் சிபிஐ விசாரணை கேட்டு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் 3 மாதங்களுக்கு EMI ஒத்திவைக்க வாய்ப்பு - ஆய்வில் தகவல்

வங்கிக் கடன் தவணை கட்டுவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்!

மும்பை: இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நாள் முடிவின்படி சென்செக்ஸ் 1,069 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.

மெசஞ்சர் ரூம் - சோதனை செய்கிறது வாட்ஸ் அப்... பயனர்கள் குதுகலம்!

ஃபேஸ்புக் நிறுவனம் ஏப்ரல் மாதம் மெசஞ்சர் ரூம்ஸ் என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது. தற்போது இந்த அம்சத்தை ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் தளத்திலும் அறிமுகம் செய்யவுள்ளது. மெசஞ்சர் ரூம்ஸ் அம்சம் ஒரே நேரத்தில் 50 பேர் கொண்ட குரூப் வீடியோ கால் அழைப்பை பயன்படுத்த அனுமதிக்கிறது.

8 நாளில் 1300 கி.மீ. சைக்கிள் பயணம்... தந்தையைச் சொந்த ஊர் அழைத்துச் சென்ற சிறுமி!

தர்பங்கா: காயமடைந்த தனது தந்தையை அழைத்துக் கொண்டு ஹரியானாவிலிருந்து பிகார் வரை சைக்கிளில் பயணம் செய்த 13 வயது சிறுமியின் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடைகள் திறக்கலாம் - அரசு அனுமதி

சென்னை: ஊரகப் பகுதிகளில் மட்டும் நாளை முதல் சலூன் கடைகளைத் திறக்க அனுமதி அளித்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தபால் நிலைய தலைமையகத்தில் வைத்தியலிங்கம் எம்.பி., நேரில் ஆய்வு!

புதுச்சேரி: தபால் நிலைய தலைமையகத்தில் மக்களுக்கான சேவைகள் முறையாக கிடைக்கின்றனவா என்பது குறித்து புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் நேரில் ஆய்வு செய்தார்.

நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி-இன் காட்சி தரம் பழைய நிலைக்கு மாற்றப்பட்டது!

ஒடிடி தளங்களில் மிகவும் பிரபலமான நெட்ஃபிளிக்ஸ் கரோனா காலங்களின் தனது தளத்தின் படகாட்சிகளின் தரத்தை குறைத்திருந்தது. தற்போது அதனை பழைய எச்.டி தரத்தில் பயனர்கள் திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தி திமுக இளைஞர் மற்றும் மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.