ETV Bharat / state

குரூப் IV தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! - tnpsc group IV exams date release

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்  ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் - IV (தொகுதி IV)  தேர்விற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

tnpsc group IV exams date release
author img

By

Published : Aug 22, 2019, 8:40 PM IST

Updated : Aug 23, 2019, 10:43 AM IST

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான ஆறாயிரத்து 491 காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில்,

  • குரூப்4 தேர்விற்கான எழுத்து தேர்வு செப்டம்பர் முதல்நாள் தமிழ்நாட்டின் 301 தாலுக்கா மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்காக 16 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
  • விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in இல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
  • மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் / பயனாளர் குறியீடு (Application No. / Login ID) மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
  • சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக்கட்டணமான ரூ.100/- செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இம்மாதம் 28ஆம் தேதிக்குள் அனுப்புமாறும் குறிப்பிட்டுள்ளனர்.
  • 28ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் கோரிக்கைகளின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலோ, contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான ஆறாயிரத்து 491 காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில்,

  • குரூப்4 தேர்விற்கான எழுத்து தேர்வு செப்டம்பர் முதல்நாள் தமிழ்நாட்டின் 301 தாலுக்கா மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்காக 16 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
  • விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in இல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
  • மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் / பயனாளர் குறியீடு (Application No. / Login ID) மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
  • சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக்கட்டணமான ரூ.100/- செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இம்மாதம் 28ஆம் தேதிக்குள் அனுப்புமாறும் குறிப்பிட்டுள்ளனர்.
  • 28ஆம் தேதிக்குப் பிறகு பெறப்படும் கோரிக்கைகளின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிலோ, contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Intro:Body:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் – செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்,  ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - IV (தொகுதி IV) - ல் அடங்கிய பணிகளுக்கான 6491 காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு அறிவிக்கை எண் 19/2019 நாள் 14.06.2019 அன்று வெளியிட்டு, அதற்கான எழுத்து தேர்வினை  வருகிற 01.09.2019 அன்று  முற்பகல் தமிழ்நாட்டின் 301 தாலுக்கா மையங்களிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்காக 16.30 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான  www.tnpscexams.net   மற்றும்  www.tnpscexams.in-ல்  22.09.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது.  மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் / பயனாளர் குறீயீடு (Application No. / Login ID) மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிப்புப்பட்டுள்ளதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளலாம்.

சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக்கட்டணமான ரூ.100/- செலுத்தியதற்கான  செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு 28.08.2019ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 





28/08/2019 க்குப் பிறகுப் பெறப்படும் கோரிக்கைகளின்  மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது.  விண்ணப்பதாரர்கள் தங்களது   நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம்  இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.





தேதி: 22.08.2019                             தேர்வு கட்டுபாட்டு அலுவலர்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் 

தேர்வாணையம்,


Conclusion:
Last Updated : Aug 23, 2019, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.