ETV Bharat / state

குரூப்-2 தேர்வு முறைகேடு - மேலும் இருவர் கைது - குருப் 2 ஏ தேர்வு முறைகேடு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

two arrested by cbcid breaking
two arrested by cbcid breaking
author img

By

Published : Feb 3, 2020, 7:46 AM IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2017ஆம் ஆண்டில் குரூப் 2ஏ தேர்வையும் 2019ஆம் ஆண்டில் குரூப்-4 தேர்வையும் நடத்தியது.

இந்த இரு தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், ஏற்கனவே குரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக 11 பேரும், குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு தொடர்பாக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வேலைபார்த்து வரும் சுதாராணி என்பதும் சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வரும் விக்னேஷ் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு - முன்னாள் இஸ்ரோ இயக்குனர் கருத்து!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2017ஆம் ஆண்டில் குரூப் 2ஏ தேர்வையும் 2019ஆம் ஆண்டில் குரூப்-4 தேர்வையும் நடத்தியது.

இந்த இரு தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்திவரும் நிலையில், ஏற்கனவே குரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக 11 பேரும், குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு தொடர்பாக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வேலைபார்த்து வரும் சுதாராணி என்பதும் சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வரும் விக்னேஷ் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு - முன்னாள் இஸ்ரோ இயக்குனர் கருத்து!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 02.02.20

குருப் 2 ஏ தேர்வு முறைகேடு, தொடரும் கைதுகள், மீண்டும் இருவர் கைது என தகவல்...

Breaking

2019 ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 மற்றும் 2017 ம் ஆண்டு நடைபெற்ற
குரூப் 2a ஆகிய தேர்வுகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டது. இரு தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக 11 பேரும், குரூப் 2 ஏ முறைகேடு தொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,
மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில் சுதாராணி மற்றும் விக்னேஷ் ஆகியோர் எனக் கூறப்பட்டுள்ள நிலையில்,
சுதாராணி கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். விக்னேஷ் என்பவர் சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று இரவு அவர்கள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

tn_che_05_tnpsc_exams_scam_allegedly_two_arrested_by_cbcid_breaking_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.