ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 2,342 பேருக்கு கரோனா!

author img

By

Published : Mar 30, 2021, 7:37 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 30) புதிதாக 2,342 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Corona
Corona

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 30) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 82 ஆயிரத்து 666 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 2,332 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து தமிழ்நாடு வந்த இரண்டு நபர்களுக்கும், ஜார்கண்டிலிருந்து வந்த நான்கு நபர்களுக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த மூன்று பேருக்கும், கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவருக்கும் என 2,342 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 91 லட்சத்து 88 ஆயிரத்து 473 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் எட்டு லட்சத்து 84 ஆயிரத்து 94 நபர்கள் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 14 ஆயிரத்து 846 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து இன்று (மார்ச் 30) 1,463 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்து 56 ஆயிரத்து 548 என உயர்ந்துள்ளது.

அதேபோல் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் ஒன்பது பேர், தனியார் மருத்துவமனையில் ஏழு பேர் என மொத்தம் 16 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் புதிதாக 874 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 242 பேருக்கும், கோயம்புத்தூரில் 207 பேருக்கும், தஞ்சாவூரில் 114 நபர்களுக்கும் காஞ்சிபுரத்தில் 100 நபர்களுக்கு எனத் தீநுண்மி தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களைத் தவிர பிற 26 மாவட்டங்களில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலும், ஐந்து மாவட்டங்களில் மூன்று இலக்கத்திலும் உள்ளன.

மாவட்டம் வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை

சென்னை - 2,48,031

கோயம்புத்தூர் - 58,679

செங்கல்பட்டு - 56,073

திருவள்ளூர் - 45,920

சேலம் - 33,436

காஞ்சிபுரம் - 30,483

கடலூர் - 25,655

மதுரை - 21,778

வேலூர் - 21,455

திருவண்ணாமலை - 19,674

திருப்பூர் - 19,269

தஞ்சாவூர் - 19,636

தேனி - 17,291

கன்னியாகுமரி - 17,507

விருதுநகர் - 16,862

தூத்துக்குடி - 16,538

ராணிப்பேட்டை - 16,453

திருநெல்வேலி - 16,058

விழுப்புரம் - 15,485

திருச்சிராப்பள்ளி - 15,558

ஈரோடு - 15,316

புதுக்கோட்டை - 11,852

நாமக்கல் - 12,093

திண்டுக்கல் - 11,856

திருவாரூர் - 11,966

கள்ளக்குறிச்சி - 10,946

தென்காசி - 8,699

நாகப்பட்டினம் - 9,122

நீலகிரி - 8,648

கிருஷ்ணகிரி - 8,441

திருப்பத்தூர் - 7,799

சிவகங்கை - 6,983

ராமநாதபுரம் - 6,550

தர்மபுரி - 6,773

கரூர் - 5,639

அரியலூர் - 4,812

பெரம்பலூர் - 2,305

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 974

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,051

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 30) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 82 ஆயிரத்து 666 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 2,332 நபர்களுக்கும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து தமிழ்நாடு வந்த இரண்டு நபர்களுக்கும், ஜார்கண்டிலிருந்து வந்த நான்கு நபர்களுக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த மூன்று பேருக்கும், கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவருக்கும் என 2,342 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 91 லட்சத்து 88 ஆயிரத்து 473 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் எட்டு லட்சத்து 84 ஆயிரத்து 94 நபர்கள் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 14 ஆயிரத்து 846 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து இன்று (மார்ச் 30) 1,463 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை எட்டு லட்சத்து 56 ஆயிரத்து 548 என உயர்ந்துள்ளது.

அதேபோல் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் ஒன்பது பேர், தனியார் மருத்துவமனையில் ஏழு பேர் என மொத்தம் 16 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் புதிதாக 874 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 242 பேருக்கும், கோயம்புத்தூரில் 207 பேருக்கும், தஞ்சாவூரில் 114 நபர்களுக்கும் காஞ்சிபுரத்தில் 100 நபர்களுக்கு எனத் தீநுண்மி தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களைத் தவிர பிற 26 மாவட்டங்களில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலும், ஐந்து மாவட்டங்களில் மூன்று இலக்கத்திலும் உள்ளன.

மாவட்டம் வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை

சென்னை - 2,48,031

கோயம்புத்தூர் - 58,679

செங்கல்பட்டு - 56,073

திருவள்ளூர் - 45,920

சேலம் - 33,436

காஞ்சிபுரம் - 30,483

கடலூர் - 25,655

மதுரை - 21,778

வேலூர் - 21,455

திருவண்ணாமலை - 19,674

திருப்பூர் - 19,269

தஞ்சாவூர் - 19,636

தேனி - 17,291

கன்னியாகுமரி - 17,507

விருதுநகர் - 16,862

தூத்துக்குடி - 16,538

ராணிப்பேட்டை - 16,453

திருநெல்வேலி - 16,058

விழுப்புரம் - 15,485

திருச்சிராப்பள்ளி - 15,558

ஈரோடு - 15,316

புதுக்கோட்டை - 11,852

நாமக்கல் - 12,093

திண்டுக்கல் - 11,856

திருவாரூர் - 11,966

கள்ளக்குறிச்சி - 10,946

தென்காசி - 8,699

நாகப்பட்டினம் - 9,122

நீலகிரி - 8,648

கிருஷ்ணகிரி - 8,441

திருப்பத்தூர் - 7,799

சிவகங்கை - 6,983

ராமநாதபுரம் - 6,550

தர்மபுரி - 6,773

கரூர் - 5,639

அரியலூர் - 4,812

பெரம்பலூர் - 2,305

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 974

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,051

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.