சென்னை: இது தொடர்பாக மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் வெளியிட்ட உள்ள ஆணையில், இனி அரசு பணியில் சேருவோருக்கு சொந்த மாவட்டங்களில் திறன் மேம்பாடு, அடிப்படை கணிணி பயிற்சி, புத்தாக்க பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக பவானி சாகர் அரசு அலுவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு வந்தனர். சொந்த மாவட்டத்தில் பயிற்சி பெறுவதால் உரிய காலத்தில் தங்களுக்குரிய தகுதிகான பயிற்சி பெற்று உரிய நேரத்தில் பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படும்.
பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் 37 நாட்களில் சுருக்க பயிற்சி அளிக்கவும், பயிற்சி அளிக்க வேண்டிய அலுவலர்கள் 100 எண்ணிக்கையில் இருப்பதால் விரைந்து பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்ய திருத்தப்பட்ட ஆணை பிறப்பித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கடலூர் மாநகராட்சி: அவசர சட்டம் பிறப்பித்த தமிழ்நாடு அரசு