ETV Bharat / state

கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 3,057; உயிரிழப்பு - 33

author img

By

Published : Oct 23, 2020, 8:13 PM IST

Updated : Oct 23, 2020, 9:57 PM IST

TN corona status today
கரோனா நிலவரம் இன்று

17:49 October 23

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (அக். 23) 3 ஆயிரத்து 57 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 20 நாள்களாக வைரஸ் தொற்றின் பாதிப்பானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (அக். 23) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது, 

தமிழ்நாட்டில், மதுரை நகரில் அமைந்துள்ள தனியார் ஆய்வகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது.

மாநிலத்தில் புதிதாக 80 ஆயிரத்து 51 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் 3 ஆயிரத்து 57 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை 90 லட்சத்து 99 ஆயிரத்து 203 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதன்மூலம் 7 லட்சத்து 3 ஆயிரத்து 250 நபர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 32 ஆயிரத்து 960 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 4 ஆயிரத்து 262 நபர்கள் வீட்டுக்கு இன்று திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 59 ஆயிரத்து 432 என்ற அளவில் உயர்ந்துள்ளது.

அதேபோல் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனைகளில் 13, அரசு மருத்துவமனைகளில் 20 என இதுவரை 10 ஆயிரத்து 858 நபர்கள் இறந்துள்ளனர்.

சென்னையில் புதிதாக 844, கோவையில் 280, சேலத்தில் 185, செங்கல்பட்டில் 186, திருவள்ளூரில் 168, திருப்பூரில் 130, ஈரோட்டில் 106 நபர்கள் வைரஸ் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டங்களில் இரண்டு இலக்க எண்களிலேயே வைரஸ் தொற்று தாக்கியுள்ளது.
 

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,94,139

செங்கல்பட்டு - 42,245

கோயம்புத்தூர் - 41,262

திருவள்ளூர் - 36,806

சேலம் - 26,027

காஞ்சிபுரம் - 24,873

கடலூர் - 22,847

மதுரை - 18,323

வேலூர் - 17,398

திருவண்ணாமலை - 17,296

தேனி - 16086

விருதுநகர் - 15,264

தஞ்சாவூர் - 14,865

தூத்துக்குடி - 14,694

ராணிப்பேட்டை - 14,669

கன்னியாகுமரி - 14,557

திருநெல்வேலி - 14,022

விழுப்புரம் - 13,409

திருச்சிராப்பள்ளி - 12,153

திருப்பூர் - 11,858

புதுக்கோட்டை - 10,378

கள்ளக்குறிச்சி - 10,095

திண்டுக்கல் - 9,690

ஈரோடு - 9,564

திருவாரூர் - 9,303

நாமக்கல் - 8,518

தென்காசி - 7.777

நாகப்பட்டினம் - 6,432

திருப்பத்தூர் - 6,349

நீலகிரி - 6,318

கிருஷ்ணகிரி - 6,270

ராமநாதபுரம் - 5,930

சிவகங்கை - 5,747

தருமபுரி - 5,409

அரியலூர் - 4,318

கரூர் - 3,923

பெரம்பலூர் - 2,101

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: இந்தியாவில் 77.5 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு!

17:49 October 23

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (அக். 23) 3 ஆயிரத்து 57 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 20 நாள்களாக வைரஸ் தொற்றின் பாதிப்பானது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (அக். 23) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது, 

தமிழ்நாட்டில், மதுரை நகரில் அமைந்துள்ள தனியார் ஆய்வகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது.

மாநிலத்தில் புதிதாக 80 ஆயிரத்து 51 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் 3 ஆயிரத்து 57 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை 90 லட்சத்து 99 ஆயிரத்து 203 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதன்மூலம் 7 லட்சத்து 3 ஆயிரத்து 250 நபர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 32 ஆயிரத்து 960 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 4 ஆயிரத்து 262 நபர்கள் வீட்டுக்கு இன்று திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 59 ஆயிரத்து 432 என்ற அளவில் உயர்ந்துள்ளது.

அதேபோல் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனைகளில் 13, அரசு மருத்துவமனைகளில் 20 என இதுவரை 10 ஆயிரத்து 858 நபர்கள் இறந்துள்ளனர்.

சென்னையில் புதிதாக 844, கோவையில் 280, சேலத்தில் 185, செங்கல்பட்டில் 186, திருவள்ளூரில் 168, திருப்பூரில் 130, ஈரோட்டில் 106 நபர்கள் வைரஸ் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டங்களில் இரண்டு இலக்க எண்களிலேயே வைரஸ் தொற்று தாக்கியுள்ளது.
 

மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:

சென்னை - 1,94,139

செங்கல்பட்டு - 42,245

கோயம்புத்தூர் - 41,262

திருவள்ளூர் - 36,806

சேலம் - 26,027

காஞ்சிபுரம் - 24,873

கடலூர் - 22,847

மதுரை - 18,323

வேலூர் - 17,398

திருவண்ணாமலை - 17,296

தேனி - 16086

விருதுநகர் - 15,264

தஞ்சாவூர் - 14,865

தூத்துக்குடி - 14,694

ராணிப்பேட்டை - 14,669

கன்னியாகுமரி - 14,557

திருநெல்வேலி - 14,022

விழுப்புரம் - 13,409

திருச்சிராப்பள்ளி - 12,153

திருப்பூர் - 11,858

புதுக்கோட்டை - 10,378

கள்ளக்குறிச்சி - 10,095

திண்டுக்கல் - 9,690

ஈரோடு - 9,564

திருவாரூர் - 9,303

நாமக்கல் - 8,518

தென்காசி - 7.777

நாகப்பட்டினம் - 6,432

திருப்பத்தூர் - 6,349

நீலகிரி - 6,318

கிருஷ்ணகிரி - 6,270

ராமநாதபுரம் - 5,930

சிவகங்கை - 5,747

தருமபுரி - 5,409

அரியலூர் - 4,318

கரூர் - 3,923

பெரம்பலூர் - 2,101

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 982

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: இந்தியாவில் 77.5 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு!

Last Updated : Oct 23, 2020, 9:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.