ETV Bharat / state

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் - திருநாவுக்கரசர் கருத்து

author img

By

Published : Aug 29, 2019, 4:50 PM IST

சென்னை: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தமிழ்நாட்டிற்கு நலன் சேர்க்கும் வகையில் இருக்கவேண்டும் என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

Thirunavukarasar pressmeet in chennai airport

மக்களவைத் தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க திருச்சி செல்லும் திருநாவுக்கரசர் எம்.பி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணம் தமிழ்நாட்டிற்கு நலன் சேர்க்கும் வகையில் அமைந்தால் நன்றாக இருக்கும். வேலையில்லா திண்டாட்டங்களை ஒழிக்கவும் புதிதாக தொழில்களை ஏற்படுத்தும் வகையிலும் இந்த பயணம் அமையவேண்டும். இதுவரை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பயணமும் அவ்வாறு அமையாமல் இருக்கவேண்டும்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தமிழ்நாட்டிற்கு நலன் சேர்க்கும்- திருநாவுக்கரசர்

பொருளாதார நெருக்கடியை போக்க ரிசர்வ் வங்கியில் உள்ள பணத்தை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது பயனளிக்காதது என்ற ராகுல்காந்தியின் கருத்து நிதர்சனமான உண்மை. பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அதேபோல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட் சரியாக தாக்கல் செய்யப்படாத காரணத்தாலேயே அவர் தற்போது மினி பட்ஜெட் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்” என்றார்.

மக்களவைத் தேர்தலில் வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க திருச்சி செல்லும் திருநாவுக்கரசர் எம்.பி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ள வெளிநாட்டு பயணம் தமிழ்நாட்டிற்கு நலன் சேர்க்கும் வகையில் அமைந்தால் நன்றாக இருக்கும். வேலையில்லா திண்டாட்டங்களை ஒழிக்கவும் புதிதாக தொழில்களை ஏற்படுத்தும் வகையிலும் இந்த பயணம் அமையவேண்டும். இதுவரை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பயணமும் அவ்வாறு அமையாமல் இருக்கவேண்டும்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தமிழ்நாட்டிற்கு நலன் சேர்க்கும்- திருநாவுக்கரசர்

பொருளாதார நெருக்கடியை போக்க ரிசர்வ் வங்கியில் உள்ள பணத்தை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது பயனளிக்காதது என்ற ராகுல்காந்தியின் கருத்து நிதர்சனமான உண்மை. பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அதேபோல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட் சரியாக தாக்கல் செய்யப்படாத காரணத்தாலேயே அவர் தற்போது மினி பட்ஜெட் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்” என்றார்.

Intro:திருச்சி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார்Body:திருச்சி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பயணம் தமிழகத்திற்கு நலன் சேர்க்கும் வகையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். மேலும் புதிதாக தொழில்கள் ஏற்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையும் வேண்டும் என்று கூறினார். அதுமட்டுமின்றி இதுவரை ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சியில் போடப்பட்ட முதலீட்டாளர்கள் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இந்த முறை அதுபோன்று இருக்க கூடாது எனக் கூறினார்.

பொருளாதார நெருக்கடியை போக்க ரிசர்வ் வங்கியில் உள்ள பணத்தை மத்திய அரசு பயன்படுத்த நினைப்பது, குண்டு காயங்கத்தின் மேல் பேண்டைடு ஓட்டுவது போன்று, இது பயனளிக்காத ஒன்று என்ற ராகுல்காந்தியின் கருத்து நிதர்சனமான உண்மை. மேலும் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சரியாக தாக்கல் செய்யாத காரணத்தால் தான் இந்த இரண்டாவது மினி பட்ஜெட் அறிவிப்புகள் காட்டுகிறது என்றார்.

கர்நாடகத்தில் எடியூரப்பா விருப்பத்தின் மாறாக மத்திய பிஜேபி துணை முதலமைச்சர்களை நியமித்து உள்ளனர். அதுமட்டுமின்றி கர்நாடகா ஆட்சி அமித்ஷா கையில் தான் உள்ளது எனவும் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.