ETV Bharat / state

வீட்டருகே நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு: மூவருக்கு வலைவீச்சு! - இருசக்கர வாகனம் திருட்டு

சென்னை : பெரவள்ளூர் அருகே வீட்டின் அருகில் நிறுத்திவைக்கப்பட்ட ஒன்றரை லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, மூன்று பேரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

theft-of-a-two-wheeler-parked-near-the-house-police-web-for-three-people
theft-of-a-two-wheeler-parked-near-the-house-police-web-for-three-people
author img

By

Published : Aug 30, 2020, 1:33 AM IST

சென்னை பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையைச் சேர்ந்தவர் பாஸ்கர் (26). இவர் சிம்சன் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகின்றார். இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டின் அருகே தனது ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் நேற்று முன்தினம் (ஆக. 28) காலை வீட்டின் முன் நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல்போனது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கர் உடனே அருகிலிருந்த சிசிடிவியை ஆராய்ந்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் பாஸ்கரின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. இதையடுத்து பாஸ்கர் திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வீட்டருகே நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த மூவர் கைது - 75 கிலோ கஞ்சா பறிமுதல்!

சென்னை பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையைச் சேர்ந்தவர் பாஸ்கர் (26). இவர் சிம்சன் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகின்றார். இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டின் அருகே தனது ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் நேற்று முன்தினம் (ஆக. 28) காலை வீட்டின் முன் நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல்போனது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கர் உடனே அருகிலிருந்த சிசிடிவியை ஆராய்ந்துள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் பாஸ்கரின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. இதையடுத்து பாஸ்கர் திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வீட்டருகே நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அடையாளம் தெரியாத நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த மூவர் கைது - 75 கிலோ கஞ்சா பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.