ETV Bharat / state

'முந்தைய கட்டணத்தின் அடிப்படையிலேயே புதிய மின்கட்டணம் கணக்கிடப்படும்' - தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

author img

By

Published : Jul 6, 2020, 1:26 PM IST

Updated : Jul 6, 2020, 5:40 PM IST

TNEB announcement on EB Bill
TNEB announcement on EB Bill

13:22 July 06

சென்னை: மின்சார சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின்போது, முந்தைய மாத கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மின் கணக்கீடு செய்யாததால் வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்குச் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின் கணக்கீடு செய்யும்போது இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிட்டு முந்தைய கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையைக் கழித்துவிட்டு மீதித் தொகைக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்துசெய்து முந்தைய அளவீட்டின் அடிப்படையில் முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தைத் தனி பில்லாகவும், மீதமுள்ள யூனிட்டுகளை அடுத்த இரு மாதங்களுக்கான தனி பில்லாகவும் நிர்ணயித்து, தனித்தனி பில்களைத் தயாரிக்க உத்தரவிடக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மின்சார வாரியம் மேற்கொள்ளும் மின் கட்டண கணக்கீட்டின்படி பொதுமக்கள் கூடுதல் தொகையைச் செலுத்த நிர்பந்திக்கப்படுவதாகக் கூறி, அதற்கான விளக்க மனு ஒன்றை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”மின்சார சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின்போது முந்தைய மின் கட்டண தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும். ஏற்கனவே, பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியிருந்ததால் மின் கட்டணம் அதிகரித்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல்செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மின் கட்டணம் ஏழைகளை மிரட்டுகிறது - சேரன்



 

13:22 July 06

சென்னை: மின்சார சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின்போது, முந்தைய மாத கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மின் கணக்கீடு செய்யாததால் வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்குச் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின் கணக்கீடு செய்யும்போது இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிட்டு முந்தைய கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையைக் கழித்துவிட்டு மீதித் தொகைக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்துசெய்து முந்தைய அளவீட்டின் அடிப்படையில் முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தைத் தனி பில்லாகவும், மீதமுள்ள யூனிட்டுகளை அடுத்த இரு மாதங்களுக்கான தனி பில்லாகவும் நிர்ணயித்து, தனித்தனி பில்களைத் தயாரிக்க உத்தரவிடக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மின்சார வாரியம் மேற்கொள்ளும் மின் கட்டண கணக்கீட்டின்படி பொதுமக்கள் கூடுதல் தொகையைச் செலுத்த நிர்பந்திக்கப்படுவதாகக் கூறி, அதற்கான விளக்க மனு ஒன்றை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”மின்சார சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்தின்போது முந்தைய மின் கட்டண தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும். ஏற்கனவே, பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியிருந்ததால் மின் கட்டணம் அதிகரித்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதையடுத்து தமிழ்நாடு அரசின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல்செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: மின் கட்டணம் ஏழைகளை மிரட்டுகிறது - சேரன்



 

Last Updated : Jul 6, 2020, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.