ETV Bharat / state

மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்... முன்னால் கணவர் தலைமறைவு!

author img

By

Published : Nov 1, 2021, 12:26 PM IST

கணவரைப் பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விசாரணை
காவல்துறை

சென்னை: அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகி (39). இவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, முன்னதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர், அழுகிய நிலையில் கிடந்த ஜானகியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து மேற்கொண்ட விசாரணையில், ஜானகியின் முதல் கணவர் ஏழுமலை சர்க்கஸ் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்ததும், குழந்தை இல்லாததால் 10 ஆண்டுகளுக்கு முன் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து, கஜேந்திரன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட ஜானகிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், காவல் துறையினரின் விசாரணையில் ஜானகி தனது முதல் கணவரான ஏழுமலையுடன் எலக்ட்ரீசியன் வேலை பார்த்துவந்த கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் உறவில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக உள்ள ராஜேஷை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் பார் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

சென்னை: அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகி (39). இவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, முன்னதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர், அழுகிய நிலையில் கிடந்த ஜானகியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து மேற்கொண்ட விசாரணையில், ஜானகியின் முதல் கணவர் ஏழுமலை சர்க்கஸ் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்ததும், குழந்தை இல்லாததால் 10 ஆண்டுகளுக்கு முன் கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து, கஜேந்திரன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட ஜானகிக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், காவல் துறையினரின் விசாரணையில் ஜானகி தனது முதல் கணவரான ஏழுமலையுடன் எலக்ட்ரீசியன் வேலை பார்த்துவந்த கேரளாவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் உறவில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக உள்ள ராஜேஷை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் பார் திறப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.