ETV Bharat / state

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களில் பனியின் தாக்கம் குறைந்துவிடும் - வானிலை ஆய்வு மையம்

author img

By

Published : Feb 11, 2023, 3:22 PM IST

தமிழ்நாட்டில் பனியின் தாக்கம் அடுத்த 4-5 நாட்களில் குறைந்துவிடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பனியின் தாக்கம் அடுத்த 4,5, நாட்களில் குறைந்துவிடும்- வானிலை ஆய்வு மையம்
பனியின் தாக்கம் அடுத்த 4,5, நாட்களில் குறைந்துவிடும்- வானிலை ஆய்வு மையம்

சென்னை: இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (பிப்.13)ஆம் தேதி முதல் (பிப்.15) ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வறண்ட வானிலை குறித்து பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் "ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வழக்கமாகவே குளிர் அதிகமாக இருக்கும். இதனால் பிப்ரவரியில் வெப்பநிலையானது 30 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைவாக உள்ளது.

பகல் நேரங்களில் வெப்பம் காரணமாக நீர் நிலைகள் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் ஆவியாகி மேலே நகர்கிறது. இரவு நேரங்களில் மேகங்கள் இல்லாத சூழ்நிலையில் குறைந்த வெப்பநிலை நிலவுவதால் பனியின் தாக்கம் உள்ளது. கோடை காலம் நெருங்கி வருவதால் வெப்பநிலையின் தாக்கம் அதிகம் இருக்கும் போது பனியின் தாக்கம் குறையும். அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக இந்த பனியின் தாக்கம் அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் குறைந்துவிடும்" என கூறினார்.

இதையும் படிங்க:சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 6 வருடங்களுக்கு பிறகு மகா நவசண்டி ஹோமம்!

சென்னை: இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (பிப்.13)ஆம் தேதி முதல் (பிப்.15) ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வறண்ட வானிலை குறித்து பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் "ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வழக்கமாகவே குளிர் அதிகமாக இருக்கும். இதனால் பிப்ரவரியில் வெப்பநிலையானது 30 டிகிரி முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைவாக உள்ளது.

பகல் நேரங்களில் வெப்பம் காரணமாக நீர் நிலைகள் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் ஆவியாகி மேலே நகர்கிறது. இரவு நேரங்களில் மேகங்கள் இல்லாத சூழ்நிலையில் குறைந்த வெப்பநிலை நிலவுவதால் பனியின் தாக்கம் உள்ளது. கோடை காலம் நெருங்கி வருவதால் வெப்பநிலையின் தாக்கம் அதிகம் இருக்கும் போது பனியின் தாக்கம் குறையும். அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக இந்த பனியின் தாக்கம் அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் குறைந்துவிடும்" என கூறினார்.

இதையும் படிங்க:சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 6 வருடங்களுக்கு பிறகு மகா நவசண்டி ஹோமம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.